|
||||||||||||||||||
என் பெண் என்னை போலவா ? |
||||||||||||||||||
என் பெண்ணை பெண் பார்க்க இன்று ஸ்ரீ ராம் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குகிறார். பெயர் பெண் உள்பட எல்லோரையும் சுற்றி அமர சொல்கிறார். தன்னை பற்றி சொல்கிறார். பெண்ணை பற்றி கேட்கிறார். பெண் பார்க்கும் படலம் போலவே இல்லை.காபி அருந்தி விட்டு கிளம்ப முற்புடும் பொழுது, என் பெண் " பெண் பார்க்கும் பொழுது பாட சொல்வார்களே, நான் ஒரு பாட்டு பாடுகிறேன்" என்கிறாள். சற்றே ராம் அமர " ராமனுக்கு மன்னன் முடி " என்ற இந்தோள ராக பாடலை அருமையாக பாடுகிறாள். ஸ்ரீ ராம் " எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது, ஆனால் பாட்டும் குரலும் அருமை, எனக்கு சம்பந்த்தம் பிடித்து இருக்கிறது. நீங்கள் பேசி முடிவு சொன்னால் எங்க அப்பா அம்மா வந்து நிச்சயம் செய்வார்கள் " என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.என் பெண் ஆபீசில் ஏதோ அவசர வேலை என்று கிளம்பி விட்டாள். என் கணவர், என் மகன், என் தம்பி , என் அப்பா எல்லோருக்கும் ஸ்ரீ ராமை பிடித்து விட்டது.
நான் நினைத்து பார்க்கிறேன். நான் இதே பாடலை என்னை பெண் பார்க்கும் பொழுது பாடினேன். பார்க்க வந்தவரெல்லாம் பாராட்ட
மாப்பிளை ஒன்றுமே சொல்லவில்லை. சங்கீதம் ரசிக்க முடியாதவர் எனக்கு வேண்டாம் என்று அந்த சம்பந்தத்தை தடுத்து விட்டேன் . " காலபோக்கில் உன் சங்கீதத்தை ரசிப்பார் , நல்ல குணம் , நல்ல வேலை, நல்ல குடும்பம் " என எத்தனை எடுத்து சொல்லியும் நான் கேட்க வில்லை . என் பெண்ணும் என் போல் தானே. அவளுக்கு கர்நாடக சங்கீதம் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று தோன்றியது.
|
||||||||||||||||||
by Ramakrishnan on 11 Jun 2013 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|