LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

என் பெண் என்னை போலவா ?

என் பெண்ணை பெண் பார்க்க இன்று  ஸ்ரீ ராம்  மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குகிறார். பெயர் பெண் உள்பட எல்லோரையும் சுற்றி அமர சொல்கிறார். தன்னை பற்றி சொல்கிறார். பெண்ணை பற்றி கேட்கிறார். பெண் பார்க்கும் படலம் போலவே இல்லை.காபி அருந்தி  விட்டு கிளம்ப முற்புடும் பொழுது, என் பெண் " பெண் பார்க்கும் பொழுது பாட சொல்வார்களே, நான் ஒரு பாட்டு பாடுகிறேன்" என்கிறாள். சற்றே ராம் அமர " ராமனுக்கு மன்னன் முடி " என்ற இந்தோள ராக பாடலை அருமையாக பாடுகிறாள். ஸ்ரீ ராம் " எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது, ஆனால்  பாட்டும் குரலும் அருமை, எனக்கு சம்பந்த்தம் பிடித்து  இருக்கிறது. நீங்கள் பேசி முடிவு சொன்னால் எங்க அப்பா அம்மா வந்து நிச்சயம் செய்வார்கள்  " என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.என் பெண் ஆபீசில் ஏதோ அவசர வேலை என்று கிளம்பி விட்டாள்.  என் கணவர், என் மகன், என் தம்பி , என் அப்பா எல்லோருக்கும் ஸ்ரீ ராமை பிடித்து விட்டது. 

நான் நினைத்து பார்க்கிறேன். நான்  இதே பாடலை என்னை பெண் பார்க்கும் பொழுது பாடினேன். பார்க்க வந்தவரெல்லாம் பாராட்ட 

மாப்பிளை ஒன்றுமே சொல்லவில்லை. சங்கீதம் ரசிக்க முடியாதவர் எனக்கு வேண்டாம் என்று அந்த சம்பந்தத்தை தடுத்து விட்டேன் . " காலபோக்கில் உன் சங்கீதத்தை ரசிப்பார் , நல்ல குணம் , நல்ல வேலை, நல்ல குடும்பம் " என எத்தனை எடுத்து சொல்லியும் நான் கேட்க வில்லை . என் பெண்ணும் என் போல் தானே.  அவளுக்கு கர்நாடக சங்கீதம் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று தோன்றியது. 

இரவு என் பெண் வந்ததும் பேச்சை தொடங்கினோம், நான் "ஸ்ரீராம் கர்நாடக சங்கீதம் தெரியாது என்கிறாரே,  இந்த சம்பந்தம் வேண்டாம் " என்றேன் .  என் மகள் " அவர் தெளிவாக தெரிவில்லை என்று சொல்லிவிட்டார் , ஆனால் என் பாட்டை ரசித்தார் . என் பாட்டு அவருக்கு ஒரு பிரமிப்பு. அவரே என் ரசிகர். இன்று தெரியாமல் ரசிக்கிறார். போக போக தெரிந்து ரசிப்பார். நல்ல மனிதனாக இருக்கிறார். சங்கீதம் அவருக்கு தெரியாததை பிரச்சனையாக நினைக்கவேண்டாம். எனக்கு இதில் சம்மதம். "

எவ்வளவு தெளிவாக பேசுகிறாள் என் மகள். நான் என் காலத்தில்  என் அப்பாவிடம் பிடிவாதம் செய்தேன். இன்று என் மகள் விவேகமாக முடிவு எடுக்கிறாள். என் மகள் என்னை போல் இல்லை.
வலைத்தமிழுக்காக ,
S.ராமகிருஷ்ணன் 
Rtd ISRO engineer

 

by Ramakrishnan   on 11 Jun 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
15-Jun-2013 07:52:58 சத்யா said : Report Abuse
நல்ல சோர்ட் story
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.