LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் உருவாக இருக்கும் நாய்கள் ஜாக்கிரதை 2 !!

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நாணயம் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் லிங்கா படம் தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருந்தாலும், இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் நாய்கள் ஜாக்கிரதை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.  

இதனால் படு உற்சாகமடைந்துள்ள சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம். சத்யராஜின் நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தினை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய உரிமை கேட்டும் நிறைய பேர் சிபிராஜை தொடர்பு கொண்டுள்ளனர்.  தமிழக உரிமையை 70 லட்சத்துக்கு விற்றார் சிபி.

படமோ 4 கோடி வசூல் செய்து படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு பலத்த லாபம் கொடுத்தது. எனவே ரீமேக் ரைட்ஸை பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்க முடிவு செய்துள்ள சிபி கோடிக்கணக்கில் விலை சொல்கிறாராம். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றுள்ளதால் வேறு சில படங்களில் நடிக்கவும் சிபிராஜுக்கு அழைப்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம்.

by Swathi   on 18 Dec 2014  0 Comments
Tags: Naaigal Jaakirathai 2   நாய்கள் ஜாக்கிரதை 2   SibiRaj   சிபிராஜ்           
 தொடர்புடையவை-Related Articles
சிபிராஜ் நடிப்பில் உருவாகும் பேய் படம் : ஜாக்சன் துரை !! சிபிராஜ் நடிப்பில் உருவாகும் பேய் படம் : ஜாக்சன் துரை !!
விரைவில் உருவாக இருக்கும் நாய்கள் ஜாக்கிரதை 2 !! விரைவில் உருவாக இருக்கும் நாய்கள் ஜாக்கிரதை 2 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.