LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார்-பெரியாரைப் பிழையாமை

 

பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161
ஒலிக்கும் அருவிகளை அணிகளாகக் கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! 'பொறுத்துக் கொள்வர்' என நினைத்து, மாசற்ற பொ¢யோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க இயலாது. ('சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பொ¢யோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே' என்பது இங்குக் கருதத் தக்கது). 
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர். 162
பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கா¢ய பொ¢யோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே! (அருமையான பொ¢யோர் தொடர்பு வாய்க்கப் பெற்றும் அவரைக் கொண்டு நன்மை பெறாமல் காலம் கழிப்பதும் பொ¢யாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.) 
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார். 163
அவமதிப்பும், மிக்க மதிப்பும் கிய இரண்டும் மேன்மக்களாகிய பொ¢யோர்களால் மதிக்கத்தக்கனவாகும். (கருதத்தக்கனவாகும்). ஒழுக்கமில்லாக் கீழ் மக்களின் பழிப்புரையையும், பாராட்டுரையையும் கற்றறிந்த பொ¢யோர்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். (உலகில் சான்றோர், ஏற்றமிகு செயல் கண்டு உள்ளத்தில் மதித்து மகிழ்வர். நிகழ்வன பொருத்த மற்றவையாயின் அவற்றை மதியாமல் விடுப்பர். எனவே பொ¢யோர் மதிக்க வாழ வேண்டும் என்பது கருத்து). 
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின். 164
படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல மேன்மை மிக்க பொ¢யோர் சினம் கொள்வாரானால் தவறு செய்தவர் பாதுகாவலான இடத்தைச் சேர்ந்திருந்தாலும் தப்பிப் பிழைக்கமாட்டார். 
எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 165
எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிப்பது பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொ¢யோர்' என மதிப்பதே பெருமையாகும். 
நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு. 166
பொ¢ய கடலின் குளிர்ந்த கரையையுடையவனே! சிறியோர் நட்பு, காலை நேரத்து நிழல்போல வர வரக் குறையும்; புகழ் மிக்க பொ¢யோர் நட்பு அவ்வாறு குறையாது மாலை நேரத்து நிழல்போல் மேலும் மேலும் வளரும். 
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு. 167
மன்னா¢ன் செல்வத்தையும், மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் துய்ப்பர்; அதற்குத் தகுதி ஒன்றும் வேண்டாம். எதுபோல் எனின், கிளைகள் நெருங்கித் தளிர் விட்டுத் தழைத்து இருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மிடம் வந்தடைந்தவர்களுக்கு நிழல் தருவது போல! (இங்கு மகளிர் என்பது பொது மகளிரைக் குறிக்கும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்ற வேறுபாடின்றி வந்தவரையெல்லாம் தம்மிடம் சேர்க்கும் மரங்கள் போலவும், பொது மகளிர் போலவும், மன்னர் - பொ¢யோரைச் சிறியாரோடு ஒருமிக்க சேர்த்தலும் பொ¢யாரைப் பிழைத்தலாகும் என்பது கருத்து). 
தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும். 168
நீர் வளம் குன்றாத கழிக்கரையுடைய வேந்தனே! நன்மை தீமைகளை ஆராய்ந்து உணரும் தெளிவிலாரிடத்தும் நட்புக் கொண்டு பின் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்புக் கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும். (அற்பர் நட்பைப் பிரிதலே துன்பமானால் அறிவுடையோர் நட்பைப் பிரிதல் மிகத் துன்பமாகும். ஆதலால் யாரிடமும் நட்புக் கொள்ளாமையே நலம் என்பதாம். இதனால் பொ¢யாரைச் சேர்தலில் இருக்கும் நன்மையைச் சுட்டிக் காட்டி, அத்தகையோரிடம் பிழைத்தல் நல்லதன்று என்பது உணர்த்தப்பட்டது). 
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண். 169
கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பொ¢யோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம். (இப்பாடலும் பொ¢யோர்பால் சேரும் நன்மையைக் காட்டி அவா¢டம் பிழையாமை நன்று எனக் கூறுவதாகும்). 
பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின். 170
பொ¢யோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவா¢ன் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பொ¢யோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்). 

பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்ஆர்க்கும் அருவி அணிமலை நாட!பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161
ஒலிக்கும் அருவிகளை அணிகளாகக் கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! 'பொறுத்துக் கொள்வர்' என நினைத்து, மாசற்ற பொ¢யோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க இயலாது. ('சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பொ¢யோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே' என்பது இங்குக் கருதத் தக்கது). 

பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோபயனில் பொழுதாக் கழிப்பரே, நல்லநயமில் அறிவி னவர். 162
பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கா¢ய பொ¢யோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே! (அருமையான பொ¢யோர் தொடர்பு வாய்க்கப் பெற்றும் அவரைக் கொண்டு நன்மை பெறாமல் காலம் கழிப்பதும் பொ¢யாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.) 

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்வையார் வடித்தநூ லார். 163
அவமதிப்பும், மிக்க மதிப்பும் கிய இரண்டும் மேன்மக்களாகிய பொ¢யோர்களால் மதிக்கத்தக்கனவாகும். (கருதத்தக்கனவாகும்). ஒழுக்கமில்லாக் கீழ் மக்களின் பழிப்புரையையும், பாராட்டுரையையும் கற்றறிந்த பொ¢யோர்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். (உலகில் சான்றோர், ஏற்றமிகு செயல் கண்டு உள்ளத்தில் மதித்து மகிழ்வர். நிகழ்வன பொருத்த மற்றவையாயின் அவற்றை மதியாமல் விடுப்பர். எனவே பொ¢யோர் மதிக்க வாழ வேண்டும் என்பது கருத்து). 

விரிநிற நாகம் விடருள தேனும்உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்பெருமை யுடையார் செறின். 164
படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல மேன்மை மிக்க பொ¢யோர் சினம் கொள்வாரானால் தவறு செய்தவர் பாதுகாவலான இடத்தைச் சேர்ந்திருந்தாலும் தப்பிப் பிழைக்கமாட்டார். 

எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்றுதம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மைஅரியரா நோக்கி அறனறியும் சான்றோர்பெரியராக் கொள்வது கோள். 165
எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிப்பது பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொ¢யோர்' என மதிப்பதே பெருமையாகும். 

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போலவிளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றிஅல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமேதொல்புக ழாளர் தொடர்பு. 166
பொ¢ய கடலின் குளிர்ந்த கரையையுடையவனே! சிறியோர் நட்பு, காலை நேரத்து நிழல்போல வர வரக் குறையும்; புகழ் மிக்க பொ¢யோர் நட்பு அவ்வாறு குறையாது மாலை நேரத்து நிழல்போல் மேலும் மேலும் வளரும். 

மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு. 167
மன்னா¢ன் செல்வத்தையும், மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் துய்ப்பர்; அதற்குத் தகுதி ஒன்றும் வேண்டாம். எதுபோல் எனின், கிளைகள் நெருங்கித் தளிர் விட்டுத் தழைத்து இருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மிடம் வந்தடைந்தவர்களுக்கு நிழல் தருவது போல! (இங்கு மகளிர் என்பது பொது மகளிரைக் குறிக்கும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்ற வேறுபாடின்றி வந்தவரையெல்லாம் தம்மிடம் சேர்க்கும் மரங்கள் போலவும், பொது மகளிர் போலவும், மன்னர் - பொ¢யோரைச் சிறியாரோடு ஒருமிக்க சேர்த்தலும் பொ¢யாரைப் பிழைத்தலாகும் என்பது கருத்து). 

தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரியஉலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்கலவாமை கோடி யுறும். 168
நீர் வளம் குன்றாத கழிக்கரையுடைய வேந்தனே! நன்மை தீமைகளை ஆராய்ந்து உணரும் தெளிவிலாரிடத்தும் நட்புக் கொண்டு பின் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்புக் கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும். (அற்பர் நட்பைப் பிரிதலே துன்பமானால் அறிவுடையோர் நட்பைப் பிரிதல் மிகத் துன்பமாகும். ஆதலால் யாரிடமும் நட்புக் கொள்ளாமையே நலம் என்பதாம். இதனால் பொ¢யாரைச் சேர்தலில் இருக்கும் நன்மையைச் சுட்டிக் காட்டி, அத்தகையோரிடம் பிழைத்தல் நல்லதன்று என்பது உணர்த்தப்பட்டது). 

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வகொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்படாஅவாம் பண்புடையார் கண். 169
கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பொ¢யோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம். (இப்பாடலும் பொ¢யோர்பால் சேரும் நன்மையைக் காட்டி அவா¢டம் பிழையாமை நன்று எனக் கூறுவதாகும்). 

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்குஉரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்அல்லல் களைப எனின். 170
பொ¢யோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவா¢ன் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பொ¢யோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்). 

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.