LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார்-தீவினை அச்சம்

 

துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு. 121
சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்¨றிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து). ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தையுடையன. அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து) 
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 122
வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள். 
அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால். 123
அந்தக் காலத்தில் (முற்பிறவியில்) நண்டைப் பிடித்து அதன் காலை ஒடித்து விரும்பித்தின்ற தீவினை வந்தடைந்தபோது சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவ 
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து. 124
உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர். (சிற்றினம் சேர அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து). 
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு. 125
பொ¢யோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும். 
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து. 126
நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 
யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. 127
மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்). 
உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும். 128
தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்புக் கொள்ளாமல் (இவர் உண்மையாக அன்பு கொள்பவர் என நம்புமாறு) உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்பவருடைய மிக்க நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். (வஞ்ச மனத்தான் நட்பு நஞ்சாகும்; அதற்கு அஞ்சுக என்பது கருத்து). 
ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு. 129
தான் பகைவர் மீது வீசிய ஒளிமிக்க வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது தனது மனவலிமையைக் கெடுப்பது உறுதி. அதுபோல, தீயோர்க்குச் செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பது நல்லதே ஆகும். (ஒருவனைக் கொல்ல வீசிய வாள் அவன் கையில் அகப்பட்டால், அவ்வாளை வீசியவனின் உறுதி கெடும். தலால் அவ்வாளுக்கு அஞ்சி அவனிடமிருந்து விலக வேண்டும். அப்படியே ஒரு மூடனுக்கு ஓர் உதவி செய்தால் அவன் அதைக் கொண்டு பல கொடுமைகள் செய்வான். அதனால் உதவி செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் புகழும் கெடுவதுமன்றி மறுமையில் நரகத்திற்கும் காரணமாகும். ஆகவே வாளுக்கு அஞ்சுவதைவிட, மூடனுக்கு உதவி செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு. 130
நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் அறச்செயலாலன்றி உயிர்க்கு வேறு செயலால் கிடைக்கும் பயன் எதுவும் இல்லை! (மனைவி மக்களிடத்துப் பற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என ஏக்கம் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் வாழப்போகிறாய்? இந்த ஏக்கத்தினாலேயே நீ இறக்கப் போவதன்றி வேறொரு நற்பயனையும் பெறப் போவதில்லை! இருக்கும் குறைந்த ஆயுட்காலத்திலாவது அறம் செய்தால் அதுவே உயிர்க்கு நற்பயனாகும். ஆதலால் உயிர்க்கு உறுதி செய்யாமல் வாழ்வதற்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 


துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு - தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்டபுல்லறி வாளர் வயிறு. 121
சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்¨றிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து). ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தையுடையன. அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து) 

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 122
வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள். 

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்றபழவினை வந்தடைந்தக் கால். 123
அந்தக் காலத்தில் (முற்பிறவியில்) நண்டைப் பிடித்து அதன் காலை ஒடித்து விரும்பித்தின்ற தீவினை வந்தடைந்தபோது சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவ 

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்கடுவினைய ராகியார்ச் சார்ந்து. 124
உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர். (சிற்றினம் சேர அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து). 

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்வானூர் மதியம்போல் வைகலும் தேயுமேதானே சிறியார் தொடர்பு. 125
பொ¢யோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும். 

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்பாம்பகத்துக் கண்ட துடைத்து. 126
நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்தேருந் துணைமை யுடையவர் - சாரல்கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்மனம்வேறு செய்கையும் வேறு. 127
மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்). 

உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!மனத்துக்கண் மாசாய் விடும். 128
தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்புக் கொள்ளாமல் (இவர் உண்மையாக அன்பு கொள்பவர் என நம்புமாறு) உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்பவருடைய மிக்க நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். (வஞ்ச மனத்தான் நட்பு நஞ்சாகும்; அதற்கு அஞ்சுக என்பது கருத்து). 

ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்இருமையும் சென்று சுடுதலால் நல்லகருமமே கல்லார்கண் தீர்வு. 129
தான் பகைவர் மீது வீசிய ஒளிமிக்க வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது தனது மனவலிமையைக் கெடுப்பது உறுதி. அதுபோல, தீயோர்க்குச் செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பது நல்லதே ஆகும். (ஒருவனைக் கொல்ல வீசிய வாள் அவன் கையில் அகப்பட்டால், அவ்வாளை வீசியவனின் உறுதி கெடும். தலால் அவ்வாளுக்கு அஞ்சி அவனிடமிருந்து விலக வேண்டும். அப்படியே ஒரு மூடனுக்கு ஓர் உதவி செய்தால் அவன் அதைக் கொண்டு பல கொடுமைகள் செய்வான். அதனால் உதவி செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் புகழும் கெடுவதுமன்றி மறுமையில் நரகத்திற்கும் காரணமாகும். ஆகவே வாளுக்கு அஞ்சுவதைவிட, மூடனுக்கு உதவி செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 

மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கிஎனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்உறுபயனோ இல்லை உயிர்க்கு. 130
நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் அறச்செயலாலன்றி உயிர்க்கு வேறு செயலால் கிடைக்கும் பயன் எதுவும் இல்லை! (மனைவி மக்களிடத்துப் பற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என ஏக்கம் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் வாழப்போகிறாய்? இந்த ஏக்கத்தினாலேயே நீ இறக்கப் போவதன்றி வேறொரு நற்பயனையும் பெறப் போவதில்லை! இருக்கும் குறைந்த ஆயுட்காலத்திலாவது அறம் செய்தால் அதுவே உயிர்க்கு நற்பயனாகும். ஆதலால் உயிர்க்கு உறுதி செய்யாமல் வாழ்வதற்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து). 

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.