LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

நாளை

சோறுபோட்ட நிலத்தை வெட்டி

வீடு கட்டுவார்!



நாளை

சோறில்லாமல் சாகும்போது

சுவரில் முட்டுவார்!



வண்டி வாகனம் நிறய வாங்கி

வாசலில் நிறுத்துவார்!



நாளை

வாந்தி வரும் உணவை உண்டு

வாழ்வைக் கழிப்பார்!



ஏழை வயிற்றில் அடித்தக் காசை

எண்ணிக் குவிப்பார்!



நாளை

ஏழு எட்டு ஏக்கர் வாங்கி விற்று

கணக்கை முடிப்பார்!



வாய் நிறையப் பொய்யைச் சொல்லி

உண்மையை மறைப்பார்!



நாளை

வாய்க்கரிசி போட்டுவிட்டு

வாய்கிழியச் சிரிப்பார்!



இலட்சம் வரும் கோடி வரும்

அள்ளி விடுவார்!



நாளை

விளைநிலத்தை விலை நிலமாய்

மாற்றி அமைப்பார்!



வாயில் பல வித்தை வைத்து

வளைத்துப் போடுவார்!



நாளை

ஏழை வாழ்வை அழித்து மறைத்து

மண்ணில் புதைப்பார்!



ஏழையை ஏய்த்து ஏணி வாங்கி

உயர ஏறுவார்!



நாளை

எதைத் திண்பது எனத் தெறியாமல்

மண்ணைத் தின்னுவார்!



நம்மையும் கொன்று தன்னையும் கொன்று

நாசமாய் போவார்!



நாளை

நாடு அழிந்து போகும் முன்னே

யார் தடுப்பார்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: நாளை   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   நாளை கவிதைகள்   Naalai   Naalai Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
இன்று நேற்று நாளை - திரை விமர்சனம் !! இன்று நேற்று நாளை - திரை விமர்சனம் !!
இவைதான் இவைதான்
ஆனால் அவள் ஆனால் அவள்
போனாளே போனாளே
காயம் தரும் காதல் காயம் தரும் காதல்
நாளை நாளை
அவள் அவள்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.