LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

நான் அனுமதிப்பதேயில்லை

இப்படித்தான் நான் அப்போ நினைப்பேன்,
எதுவும் சுலபமானதென்று.
முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப்பேன்,
எல்லாம் நல்லவையே என்று.
எல்லோரும் திருப்தியுடனேயே வாழ்ந்தார்கள்
என்றுதான் நான் நினைப்பேன்.
யாரும் குரலெடுத்து அழுதுபுலம்ப நான் கேட்டதில்லை!
பாருங்கள்!
இளஞ்சூ¡¢யன் எவ்வாறு அந்நாட்களில் தன்னம்பிக்கையால்
முகஞ்சிவந்தபடி
'ஜிவ்' என்று கிழக்கைவிட்டு விரைந்து எழுவான்!
அப்போ, அந்நாட்களில்...

இரட்டை மாட்டுவண்டிகள்
தார் ரோட்டுக்களில் கரகரத்துச் செல்லும்!
தலைப்பாகையுடன் இருப்பான் முன்னணியத்தில் உழவன்.
மணிகளுடன் யுகணகணருத்தவாறு
'ஹேய்' என்று அவன் அதட்டுவது கேட்கும்.
பின்னே செல்லும் ஏரும் சாக்கு நிறைந்த வைக்கோலும்.
சின்னஞ்சிறு மகனும் இருப்பான்
சிமிட்டும் கண்களால் §ஐ¡டிப்புறாக்கள்
'குறுகுறு'த்துப் பறப்பதைப் பார்ப்பான்.
சைக்கிளன்றின் பின்னே பாரம் நெளிய
மீனவனொருவன் காற்றைக் கிழித்தவாறு செல்வான்.
அவனைச் சுற்றி மீன் வீச்சம் இருக்கும்.
கரகரத்த குரலில் மகனைத் திரும்பிப்பார்த்துக் கத்துவான்!
'பள்ளிக்குப் போடா!'

இப்படித்தான் அந்நாட்களில் இருந்தனயாவும்.
பாருங்கள்,
நான் பொய்யுரைத்தேனா?
நீங்களும் அறிவீர்கள்
யாவும் நேர்த்தியாகவே நடந்து வந்தன.
வயல் விளைந்தது, மீன் நிறைந்தது.
சுறுசுறு வென்று தி¡¢யும் சனக்கூட்டத்தின் தலைக்கு மேலே
நகைத்தவாறு சூ¡¢யன் போவான்.

சந்திரனோவெனில்,
பெண்குணம் கொண்டு நாணி முகில்களுக்குள் மறைந்து
நோக்குவான்
காற்று பூக்களுக்குச் சாமரம் வீசும்.
தென்றலென மலர் மணக்க
என்முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி
நான் நினைப்பேன்.

இப்போ, பாருங்கள்!
தார் ரோட்டு கிழடுதட்டிக்கிடக்கிறது,
தன்னந்தனியனாய் வெயிலில் காய்ந்தபடி.
இரட்டை மாட்டு வண்டிகள் கரகரத்தபடி
சென்றகாலம் எங்கே?
'ஹேய்' என்று மாட்டை அதட்டிய குரல்
கேட்பதேயில்லை.
எங்கோ தூரத்தில் ஒரு கிழவி
மகனுக்காக அழுகிறாள்.

தார்ரோட்டு தனித்துக் காய்ந்தபடி,
எழும்பிக் குதித்து நிலம் அதிருமாறு செல்லும்
அழுக்குப் பச்சை யுட்ரக்ருகுகளைக் தவிர
எந்தச் சிநேகிதனும் அதற்குக் கிடையாது!
'ட்ரக்'குகளிலிருந்து முட்டாள்தனமாக தலையை நீட்டுகின்றன
துப்பாக்கிகள்!
ஆம்,
மிக முட்டாள்தனமான துப்பாக்கிகள்!
அவற்றுக்கு மூளையே கிடையா,
மிகவும் மடத்தனமாக அவை உயிர்களை உறிஞ்சும்.
இன்றும்கூட, அந்தக் கிழவியியன் மகன்...
ம்
எங்கோ தூரத்திலிருந்து ஒரு கிழவி
மகனுக்காக அழுகிறாள்!

பாருங்கள்!
எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று.
நான் பொய்யுரைக்கின்றேனா?
நீங்களே காண்கின்றீர்கள்.
உழவனின் மகனும், அந்தச்
செம்படவனின் மகனும்
எங்கோ கண்காணாத இடத்திற்கு
ஓடிப்போனார்கள்.
கிழவிகள்
அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்:
'அவர்கள் துப்பாக்கி சுடுவார்களாம்!'
துப்பாக்கிகள்..!
துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது.

எல்லாவற்றையும் நாசம் செய்வன அவை
சூ¡¢யனைக் கூட!
பாருங்கள்...
அவனுங்கூட தயங்கித் தயங்கி
பனைவட்டுக்குள் மறைந்தபடி தி¡¢கிறான்
சந்திரனைப்பற்றி நான் இப்போ அறியேன்!
இரவுகளில் நான் சுவர்களுக்குள்ளேயே முடங்குகிறேன்.
சந்திரன் வெட்கம் கெட்டபடி
நிர்வாண வலம் வருகின்றான்.

முகத்திலறையும்படி காற்றை நான் இப்போ
அனுமதிப்பதே இல்லை!
பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று
இப்போ இல்லை.
பிணங்களுடன் புணர்ந்து விட்டு
நீசத்தனமாகவே வருகிறது,
காற்று.

காற்றை நான் முகத்தில்பட
அனுமதிப்பதே இல்லை.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.