|
|||||
நான் - விமர்சனம் |
|||||
அன்பு கிடைக்காமல் போவதே தவறு நடப்பதற்கு மூல காரணம் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் "நான்". ஹீரோ கார்த்திக் தனது அம்மா இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்வதை நேரில் பார்த்து விடுகிறான். இதனை அறிந்த அவனது அப்பா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் அவனது அம்மாவையும், கள்ளக் காதலனையும் வீட்டோடு வைத்து எரித்துக் கொலை செய்கிறான்.
அதன் பின்னர் சிறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, கார்த்திக் வரும் பஸ் விபத்தில் மாட்டிக் கொள்கிறது. அந்த விபத்தில் பலியான மருத்துவ கல்லூரி மாணவனின் சான்றிதழை எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையை புதிய பாதையில் அமைக்க நினைக்கிறான் கார்த்திக். இதற்கு தனது தனிப்பட்ட திறமையான மற்றொருவரின் கையெழுத்தை அச்சு அசலாக அப்படியே போடுவதை பயன்படுத்தி முகமது சலீம் என்ற பெயருடன் மருத்துவக் கல்லூரியில் படிக்க சேர்கிறான்.
அங்கு அசோக் என்ற பணக்கார நண்பனின் நட்பு கிடைக்கிறது. அவர்களது நட்புக்கு அசோக்கின் காதலி மூலம் பிரச்சனை வரவே, தன் நண்பனே தன்னை காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற கோபத்தில் கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் அசோக்.
அந்த நேரத்தில் முஸ்லீமாக கார்த்திக் செய்திருக்கும் ஆள்மாறாட்டத்தினை அறியும் அசோக் கார்த்திக்கை மிரட்ட இவர்களுக்கிடையேயான மோதலில் அசோக் இறந்து விடுகிறான். இந்த கொலையை மறைப்பதற்காக ஒவ்வொரு முறையும் தவறு செய்யகிறான் கார்த்திக், தான் வாழும் இன்னொருவரின் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள அவன் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சி அளிக்கிறது. ஹீரோயிசம் இல்லாமல் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பை விஜய் ஆண்டனி வெளிப்படுத்துவது படத்திற்கு கூடுதல் சிறப்பு.
படத்தில் இன்னொரு ஹீரோ அசோக்காக வரும் ‘ஆனந்த தாண்டவம்’ ஹீரோ சித்தார்த். படத்தின் முதல் பாதியில் வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஹீரோயினான ரூபா மஞ்சரி இரண்டாம் பாதியில் நடிப்பதற்குண்டான வாய்ப்பை சரியாக செய்திருக்கிறார். சித்தார்த் என்ன ஆனான் என்று தெரியாமல் தவிப்பதிலும், விஜய் ஆண்டனியின் மேல் சந்தேகம் வந்து கோபப்படும் நேரத்திலும் நல்ல நடிப்பு. இன்னொரு நாயகியாக வரும் அனுயா அவ்வப்போது வந்து போகிறார். விஜய் ஆண்டனியின் இசை மற்றும் தெளிவான திரைக்கதை படத்திற்கு கூடுதல் பலம்.
அன்பு கிடைக்காமல் போவதே தவறு நடப்பதற்கு மூல காரணம் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் "நான்". ஹீரோ கார்த்திக் தனது அம்மா இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்வதை நேரில் பார்த்து விடுகிறான். இதனை அறிந்த அவனது அப்பா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் அவனது அம்மாவையும், கள்ளக் காதலனையும் வீட்டோடு வைத்து எரித்துக் கொலை செய்கிறான்.
அதன் பின்னர் சிறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, கார்த்திக் வரும் பஸ் விபத்தில் மாட்டிக் கொள்கிறது. அந்த விபத்தில் பலியான மருத்துவ கல்லூரி மாணவனின் சான்றிதழை எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையை புதிய பாதையில் அமைக்க நினைக்கிறான் கார்த்திக். இதற்கு தனது தனிப்பட்ட திறமையான மற்றொருவரின் கையெழுத்தை அச்சு அசலாக அப்படியே போடுவதை பயன்படுத்தி முகமது சலீம் என்ற பெயருடன் மருத்துவக் கல்லூரியில் படிக்க சேர்கிறான்.
அங்கு அசோக் என்ற பணக்கார நண்பனின் நட்பு கிடைக்கிறது. அவர்களது நட்புக்கு அசோக்கின் காதலி மூலம் பிரச்சனை வரவே, தன் நண்பனே தன்னை காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற கோபத்தில் கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் அசோக்.
அந்த நேரத்தில் முஸ்லீமாக கார்த்திக் செய்திருக்கும் ஆள்மாறாட்டத்தினை அறியும் அசோக் கார்த்திக்கை மிரட்ட இவர்களுக்கிடையேயான மோதலில் அசோக் இறந்து விடுகிறான். இந்த கொலையை மறைப்பதற்காக ஒவ்வொரு முறையும் தவறு செய்யகிறான் கார்த்திக், தான் வாழும் இன்னொருவரின் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள அவன் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சி அளிக்கிறது. ஹீரோயிசம் இல்லாமல் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பை விஜய் ஆண்டனி வெளிப்படுத்துவது படத்திற்கு கூடுதல் சிறப்பு.
படத்தில் இன்னொரு ஹீரோ அசோக்காக வரும் ‘ஆனந்த தாண்டவம்’ ஹீரோ சித்தார்த். படத்தின் முதல் பாதியில் வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஹீரோயினான ரூபா மஞ்சரி இரண்டாம் பாதியில் நடிப்பதற்குண்டான வாய்ப்பை சரியாக செய்திருக்கிறார். சித்தார்த் என்ன ஆனான் என்று தெரியாமல் தவிப்பதிலும், விஜய் ஆண்டனியின் மேல் சந்தேகம் வந்து கோபப்படும் நேரத்திலும் நல்ல நடிப்பு. இன்னொரு நாயகியாக வரும் அனுயா அவ்வப்போது வந்து போகிறார். விஜய் ஆண்டனியின் இசை மற்றும் தெளிவான திரைக்கதை படத்திற்கு கூடுதல் பலம். |
|||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|