LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

நான்மணிக்கடிகை

 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். 
கடவுள் வாழ்த்து
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்
அருமை அழித்த மகன்.
நூல்
எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து! 1
பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2
மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன். 3
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று 
ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி? 4
கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்
பொருளில் பிறந்துவிடும். 5
திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 6
'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள்
செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்
காப்பார்க்கும் இல்லை, துயில். 7
கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும். 8
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான் செல் உலகத்து அறம். 9
கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,
மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,
இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்! 10
கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம் சிதைக்கும் வினை. 11
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,
முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், நோய். 12
பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று. 13
வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து. 14
இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து
மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு
செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது
வேண்டின், வெகுளி விடல்! 15
கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்
கற்றான் கடந்துவிடும். 16
பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர். 17
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல். 18
பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும். 19
மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்த
அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,
கற்று அறிவு இல்லா உடம்பு. 20
மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின். 21
புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு. 22
மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல். 23
நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும். 24
அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த
எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்
கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,
நட்டார்கண் விட்ட வினை! 25
கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்
பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்
விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. 26
கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 27
குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்
செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு. 28
திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். 29
புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த
நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்
இன்னா வித்து ஆகிவிடும். 30
பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும்
புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர்,
வல்லென்ற நெஞ்சத்தவர். 31
அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும்,
தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,
இளமையோடு ஒப்பதூஉம் இல். 32
இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின்
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின்,
அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய
பெரியரான் எய்தப்படும். 33
மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி
ஊரில் பிளிற்றிவிடும். 34
மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள்,
நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய
முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம், மேல். 35
நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின்
தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய
பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது
பாடல் உணர்வாரகத்து. 36
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்
செய்யாமை, செல்சார் உயிர்க்கு. 37
கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக்
கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட
இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார்
முன்னியவே செய்யும், திரு. 38
திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக்
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற
மறைக்க மறையாதாம், காமம்; முறையும்
இறை வகையான் நின்றுவிடும். 39
பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால்,
'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும் நல்லாள்
உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,
கண்டனவும் காணா கெடும். 40
போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த
வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்
மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்
மன்னர் சீர் வாடிவிடும். 41
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை. 42
பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட
ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா
நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,
நண்பினார் நண்பு கெடும். 43
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்
பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து. 44
நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்
முகம் போல முன் உரைப்பது இல். 45
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல் வாழ்வார் இல்வழி இல். 46
போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன்
தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல்
வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம்
நனையினான் நந்தும், நறா. 47
சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று
'இல்' என்றல் யார்க்கும் அரிது. 48
இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்;
உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா
முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,
தன் அடைத்த சேனை சுடும். 49
எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை
உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து
சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும்
தேர்தற்பொருள, பொருள். 50
யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்
மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்
வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள. 51
எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி. 52
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு. 53
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
என்ன கடவுளும் இல். 54
கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்
செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென
உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்
புற்ற அன்னர், புல்லறிவினார். 55
மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;
துறப்பார், துறக்கத்தவர். 56
என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;
என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர். 57
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன். 58
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,
பாடு அறியாதானை இரவு. 59
நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து
கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி
நன்று ஊட்ட, நந்தும், விருந்து. 60
பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்
நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,
போற்றாதார் போற்றப்படும். 61
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,
நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள. 62
திரி அழல் காணின், தொழுப; விறகின்
எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்
இளமை பாராட்டும், உலகு. 63
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்
துன்புறுவாள் ஆகின், கெடும். 64
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்
புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்
அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்
வரிசையான் இன்புறூஉம், மேல். 65
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்
முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்
அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,
அவா இல்லார் செய்யும் வினை. 66
கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து
வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்
நல்லர் சிதையாதவர். 67
மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீணர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு
வானம் உரைத்துவிடும். 68
பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்
மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும், குடி. 69
ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட
குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்
வளத்த அனைய, வாழ்வார் வழக்கு. 70
ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார். 71
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்
பொய்யா வித்து ஆகிவிடும். 72
தேவர் அனையர், புலவரும்; தேவர்
தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்,
கற்றாரைக் காதலவர். 73
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,
'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார்,
'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,
'தா' எனின், தாயம் வகுத்து! 74
நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து,
எண்ணினான் எண்ணப்படும். 75
சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;
தாவாத இல்லை, வலிகளும்; மூவா
இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல். 76
சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற
நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்
மகிழான் அறிப, நறா. 77
நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,
மாறு உள் நிறுக்கும் துணிபு? 78
கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,
உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,
கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,
வெகுளி கெடுத்துவிடல். 79
நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;
வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு. 80
நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச் 
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ் ஊரும் ஊர். 81
கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். 82
நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும். 83
ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்
அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,
கேளிர் ஒரீஇவிடல். 84
கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை. 85
பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம். 86
மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும், களிறு. 87
மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண். 88
பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,
பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,
சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,
கொன்றான்மேல் நிற்கும், கொலை. 89
வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற
மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்
கயம் பெருகின், பாவம் பெரிது. 90
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;
வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,
தமர் அல்லார் கையகத்து ஊண். 91
எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்
கல்லா வளரவிடல் தீது; நல்லார்
நலம் தீது, நாண அற்று நிற்பின்; குலம் தீது,
கொள்கை அழிந்தக்கடை. 92
ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல். 93
கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை
பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை
கள்வன் அறிந்துவிடும். 94
வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்
சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். 95
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின். 96
மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும். 97
எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை. 98
ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை. 99
அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம். 100
மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு. 101
மிகைப் பாடல்கள்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 1
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல். 2
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். 3
முனியார், அரிய முயல்வார்; அவரின்
முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார். 4
நான்மணிக்கடிகை முற்றும்.

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். 
கடவுள் வாழ்த்து

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்புது மலர் ஒக்கும், நிறம்.
படியை மடியகத்து இட்டான்; அடியினான்முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்துஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்அருமை அழித்த மகன்.
நூல்

எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,கூறல்லவற்றை விரைந்து! 1
பறை பட வாழா, அசுணமா; உள்ளம்குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்துநெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2
மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்துஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிபகேளிரான் ஆய பயன். 3
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,நல் ஆள் பிறக்கும் குடி? 4
கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலிசொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்பொருளில் பிறந்துவிடும். 5
திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரியஅறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,போற்றாதார் முன்னர்ச் செலவு. 6
'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டுஉள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள்செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்காப்பார்க்கும் இல்லை, துயில். 7
கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்றுஉற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றெனஅல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்வெகுண்டார் முன் தோன்றா கெடும். 8
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மைநலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணிதான் செல் உலகத்து அறம். 9
கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரைநயத்தின் பிணித்துவிடல்! 10
கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்தநன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,ஆக்கம் சிதைக்கும் வினை. 11
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறுகோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்தவத்தின் தருக்குவர், நோய். 12
பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்றபெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்துஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்தீர்தலின் தீப் புகுதல் நன்று. 13
வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,இன்மைக் குழியுள் விரைந்து. 14
இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்துமன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடுசெல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வதுவேண்டின், வெகுளி விடல்! 15
கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்கற்றான் கடந்துவிடும். 16
பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாகமுத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்தகுதி இறுவாய்த்து, உயிர். 17
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்கேளிர் ஒரீஇவிடல். 18
பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றியமண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,பாடல் அதிர்ந்துவிடும். 19
மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்தஅவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,கற்று அறிவு இல்லா உடம்பு. 20
மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்தகலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,கூடார்கண் கூடிவிடின். 21
புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்பேணாமை செய்வது பேதைமை; காணாக்குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்தகண்ணராச் செய்வது, கற்பு. 22
மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்உடன் உறையும் காலமும் இல். 23
நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்தஅவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்டதேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்உள்ளானால் உள்ளப்படும். 24
அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்தஎஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,நட்டார்கண் விட்ட வினை! 25
கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. 26
கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியேஇப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்உயர்ந்த உலகம் புகும். 27
குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்றுஉறுவுழி நிற்பது அறிவு. 28
திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்வன்மையின் வன்பாட்டது இல். 29
புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்தநகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்இன்னா வித்து ஆகிவிடும். 30
பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்குஅணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும்புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர்,வல்லென்ற நெஞ்சத்தவர். 31
அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும்,தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும்வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,இளமையோடு ஒப்பதூஉம் இல். 32
இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின்நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின்,அரிய அரியவற்றால் கொள்ப; பெரியபெரியரான் எய்தப்படும். 33
மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்தஅறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களிஊரில் பிளிற்றிவிடும். 34
மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள்,நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்யமுழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார்வழங்கத் தளிர்க்குமாம், மேல். 35
நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின்தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடையபெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிதுபாடல் உணர்வாரகத்து. 36
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்ததானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்செய்யாமை, செல்சார் உயிர்க்கு. 37
கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக்கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்டஇனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார்முன்னியவே செய்யும், திரு. 38
திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக்கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்றமறைக்க மறையாதாம், காமம்; முறையும்இறை வகையான் நின்றுவிடும். 39
பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால்,'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும் நல்லாள்உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,கண்டனவும் காணா கெடும். 40
போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்தவேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்மன்னர் சீர் வாடிவிடும். 41
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்கதந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்முந்து தான் செய்த வினை. 42
பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்டஐவரால் தானே வினை கெடும்; பொய்யாநலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,நண்பினார் நண்பு கெடும். 43
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்றவிருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்ஊடல் உணராரகத்து. 44
நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறியமாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்முகம் போல முன் உரைப்பது இல். 45
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்இல் வாழ்வார் இல்வழி இல். 46
போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன்தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல்வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம்நனையினான் நந்தும், நறா. 47
சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று'இல்' என்றல் யார்க்கும் அரிது. 48
இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்;உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளாமுன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,தன் அடைத்த சேனை சுடும். 49
எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனைஉள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்துசேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும்தேர்தற்பொருள, பொருள். 50
யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மைவேள்வியோடு ஒப்ப உள. 51
எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடுஅறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்செறிவு உடையான் சேனாபதி. 52
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழைநல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரைஅல்லார் உவப்பது கேடு. 53
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்என்ன கடவுளும் இல். 54
கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றெனஉற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்புற்ற அன்னர், புல்லறிவினார். 55
மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;துறப்பார், துறக்கத்தவர். 56
என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்சாவாரும் என்றும் உளர். 57
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்முனியா ஒழுக்கத்தவன். 58
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்றநகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,பாடு அறியாதானை இரவு. 59
நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்துவழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்துகன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பிநன்று ஊட்ட, நந்தும், விருந்து. 60
பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,போற்றாதார் போற்றப்படும். 61
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்பாடு எய்தும் பாட்டே உள. 62
திரி அழல் காணின், தொழுப; விறகின்எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்இளமை பாராட்டும், உலகு. 63
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்துன்புறுவாள் ஆகின், கெடும். 64
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்வரிசையான் இன்புறூஉம், மேல். 65
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,அவா இல்லார் செய்யும் வினை. 66
கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்துவைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்நல்லர் சிதையாதவர். 67
மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீணர்ப்புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்புவானம் உரைத்துவிடும். 68
பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்சோற்றான் வீறு எய்தும், குடி. 69
ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்டகுளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்வளத்த அனைய, வாழ்வார் வழக்கு. 70
ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்நாழிகையானே நடந்தன; தாழீயா,தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்வெஞ் சொலால் இன்புறுவார். 71
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாதபேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்பொய்யா வித்து ஆகிவிடும். 72
தேவர் அனையர், புலவரும்; தேவர்தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும்பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்,கற்றாரைக் காதலவர். 73
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார்,'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,'தா' எனின், தாயம் வகுத்து! 74
நாக்கின் அறிப இனியவை மூக்கினான்மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும்கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து,எண்ணினான் எண்ணப்படும். 75
சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;தாவாத இல்லை, வலிகளும்; மூவாஇளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்கேடு இன்றிச் சென்றாரும் இல். 76
சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்றநீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்மகிழான் அறிப, நறா. 77
நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதைவிடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,மாறு உள் நிறுக்கும் துணிபு? 78
கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,வெகுளி கெடுத்துவிடல். 79
நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு. 80
நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச் செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்துஉடையார்க்கும் எவ் ஊரும் ஊர். 81
கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். 82
நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்பாடலான் பாடு பெறும். 83
ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,கேளிர் ஒரீஇவிடல். 84
கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்கொள்ளாமை வேண்டும், பகை. 85
பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,செல்லா இடத்துச் சினம். 86
மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணியநாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்ததூணின்கண் நிற்கும், களிறு. 87
மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடுவென்றி அறிப அரசர்கள்; என்றும்வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,அணங்கல் வணங்கின்று, பெண். 88
பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,கொன்றான்மேல் நிற்கும், கொலை. 89
வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்றமென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்கயம் பெருகின், பாவம் பெரிது. 90
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,தமர் அல்லார் கையகத்து ஊண். 91
எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்கல்லா வளரவிடல் தீது; நல்லார்நலம் தீது, நாண அற்று நிற்பின்; குலம் தீது,கொள்கை அழிந்தக்கடை. 92
ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்தபோகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்உள் நாட்டம் இன்மையும் இல். 93
கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பைபுள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பைபல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பைகள்வன் அறிந்துவிடும். 94
வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீயபரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். 95
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,பேதையார், முன்னர்ப்படின். 96
மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னைமாசுடைமை காட்டிவிடும். 97
எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணியயாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,பண்பு உடையாள் இல்லா மனை. 98
ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்துவாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,உரன் சிறிதுஆயின், பகை. 99
அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;கொலைப்பாலும் குற்றமே ஆம். 100
மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனியகாதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,ஓதின், புகழ் சால் உணர்வு. 101

மிகைப் பாடல்கள்

வைததனால் ஆகும் வசையே வணக்கமதுசெய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்தபொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்தஅருளினால் ஆகும் அறம். 1
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்ஒருவன் அறியா தவனும் - ஒருவன்குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்கணனடங்கக் கற்றானும் இல். 2
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலாவன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்வீவிலா வீடாய் விடும். 3
முனியார், அரிய முயல்வார்; அவரின்முனியார், அறம் காமுறுவார்; இனியஇரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்குஉயங்கார், அறிவுஉடையார். 4

நான்மணிக்கடிகை முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.