|
||||||||
நாயோடு சம்பாசித்தல் |
||||||||
இன்னும் வண்டி வரவில்லை
நிற்கிறேன் நிற்கிறேன் நிற்கிறேன்
தெருவில்.
கண்ணெதிரே ஒரு மரம்
நான் பார்த்திருக்கத் துளிர்விட்டது.
அதன் கன்னி
பூவாக மலர்ந்தது.
இனி காய்க்கலாம் பழுக்கலாம் பழத்தின் விதையும்
நிலத்தில் விழுந்து இன்னொரு மரமும்
முளைக்கலாம், முளைக்கிறது-
எனக்கான வண்டி இன்னும் இல்லை.
நான் நிற்கும் இடத்தில்
எனது குதிகாலில்
வேர் எழுகிறது இனி நானும் தளைக்க.
நாயே!
நான் நிற்கின்ற இடத்திற்கு பக்கத்தில் படுக்கின்ற
அநாதரவான பிராணியே!
நான் நடக்க முடியாது தளைத்தால்
நீ காவல் செய்.
சிலநேரம் என்னில் ஒருவிதப் பூப்பூக்கும்
நீயே பறித்து முகர்ந்துகொள்
என் காயை
அது முதிர்ந்து கனியை
நீயே புசி.
இந்த மனிதன்
தினமும் தொழிலுக்காய்ப் பயணித்த பிறவி
வாகனம் காத்து நின்று தளைத்தான்
என்பதை நீ
குரைத்தாவது ஊருக்கு விளக்கு.
இனி மக்கள்
கால்களுக்கு சக்கரம் பூட்டிப் பயணிக்கும்
தலைமுறையும் வந்துவிடும்,
என் வண்டிதான் வராது.
எந்த மலையோடு மோதிப் புரண்டதோ?
கண்கெட்ட பாதை விழுங்கி
மலமாகத் தள்ளியதோ?
என் தலையில் குருத்து.
நிலத்தில் ஆணிவேர்.
இன்னும் வண்டி வரவில்லை நிற்கிறேன் நிற்கிறேன் நிற்கிறேன் தெருவில்.
கண்ணெதிரே ஒரு மரம் நான் பார்த்திருக்கத் துளிர்விட்டது. அதன் கன்னி பூவாக மலர்ந்தது. இனி காய்க்கலாம் பழுக்கலாம் பழத்தின் விதையும் நிலத்தில் விழுந்து இன்னொரு மரமும் முளைக்கலாம், முளைக்கிறது-
எனக்கான வண்டி இன்னும் இல்லை. நான் நிற்கும் இடத்தில் எனது குதிகாலில் வேர் எழுகிறது இனி நானும் தளைக்க.
நாயே! நான் நிற்கின்ற இடத்திற்கு பக்கத்தில் படுக்கின்ற அநாதரவான பிராணியே! நான் நடக்க முடியாது தளைத்தால் நீ காவல் செய்.
சிலநேரம் என்னில் ஒருவிதப் பூப்பூக்கும் நீயே பறித்து முகர்ந்துகொள் என் காயை அது முதிர்ந்து கனியை நீயே புசி.
இந்த மனிதன் தினமும் தொழிலுக்காய்ப் பயணித்த பிறவி வாகனம் காத்து நின்று தளைத்தான் என்பதை நீ குரைத்தாவது ஊருக்கு விளக்கு.
இனி மக்கள் கால்களுக்கு சக்கரம் பூட்டிப் பயணிக்கும் தலைமுறையும் வந்துவிடும், என் வண்டிதான் வராது. எந்த மலையோடு மோதிப் புரண்டதோ? கண்கெட்ட பாதை விழுங்கி மலமாகத் தள்ளியதோ? என் தலையில் குருத்து. நிலத்தில் ஆணிவேர்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|