நாக்பூர் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. கடைசி டெஸ்ட், நாக்பூரில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்துள்ளது.இரண்டாம் நாளன இன்று அந்த அணி உணவு இடைவேளை வரை ஏழு விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
|