LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 817 - நட்பியல்

Next Kural >

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)
மணக்குடவர் உரை:
நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிவடையும் வகையினராகாது சிரித்து மகிழும் வகையினராதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும்-பகைவரால் வருந்துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம். நகை வகையராக்குவார் பிறருக்கு அறிவூட்டாது அவரைச் சிரித்து மகிழவைப்பதையே தொழிலாகக்கொண்டு பொருள்பெறும் குறும்பர், காமுகர், நகை வேழம்பர் (கோமாளிக் கூத்தர்) முதலியோர். அவர் நட்பு மிகத்தீயது என்பது கருத்து. பத்தடுத்த கோடியுறும் என்பது வலியுறுத்தல் பற்றிவந்த உயர்வு நவிற்சி. ஆகியநட்பு ஆதற்கேதுவான நட்பு. 'நட்பு' ஆகுபொருளி. 'வருந்துன்பம்' என்பது அவாய்நிலையால் வந்தது.
கலைஞர் உரை:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
Translation
From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vain.
Explanation
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
Transliteration
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal Paththatuththa Koti Urum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >