LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அவ்வையார் நூல்கள்

நல்வழி

 

கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
நூல்
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய 
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40
நல்வழி முற்றிற்று.

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவைமண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்தீதொழிய நன்மை செயல். 1
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்பட்டாங்கில் உள்ள படி. 2
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றேஇடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுகஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாதுபுண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமேஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4
வருந்தி அழைத்தாலும் வாராத வாராபொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கிநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்துதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்உடலோடு வாழும் உயிர்க்கு. 6
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்புபொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்தரியாது காணும் தனம். 8
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறுஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்குநல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்இல்லை என மாட்டார் இசைந்து. 9
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!உன்னோடு வாழ்தல் அரிது. 11
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறியவீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?மெய் அம்புவி அதன் மேல். 13
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சிவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாதுஉயிர் விடுகை சால உறும். 14
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்குஅபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்விதியே மதியாய் விடும். 15
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. 16
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இரு நிதியம்?-வையத்துஅறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்றுவெறும் பானை பொங்குமோ மேல்! 17
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரேசரணம் கொடுத்தாலும் தாம். 18
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்நாழி அரிசிக்கே நாம். 19
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மைமறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கிவறுமைக்கு வித்தாய் விடும். 20
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்தரும் சிவந்த தாமரையாள் தான். 21
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்குஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம்? 22
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமேபாதாள மூலி படருமே - மூதேவிசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமேமன்றோரம் சொன்னார் மனை. 23
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழேமடக்கொடி இல்லா மனை. 24
ஆன முதலில் அதிகம் செலவானால்மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசைஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்து போம். 26
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றைநினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்எனையாளும் ஈசன் செயல். 27
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்தமாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான். 28
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்உற்றார் உலகத் தவர். 29
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி. 30
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்தாரத்தின் நன்று தனி. 31
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாகஉண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்வேருக்கு நெக்கு விடும். 33
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானைஇல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்செல்லாது அவன்வாயிற் சொல். 34
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவாவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்குஉரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீபோதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்மாதர்மேல் வைப்பார் மனம். 36
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்விண்ணுறுவார்க் கில்லை விதி. 37
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலைதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்போனவா தேடும் பொருள். 38
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்முலையளவே ஆகுமாம் மூப்பு. 39
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைதிருவா சகமும் திருமூலர் சொல்லும்ஒருவாசகம் என்று உணர். 40


நல்வழி முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.