LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் - 22

நோய் அணுகாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் – அறிமுகம்


 

ஒரு நாள் முழுவதும் நாம் செய்து கொண்டிருக்கும் சில செயல்களை எவ்வாறு சரியாகச் செய்ய வேண்டும் என இது வரை பார்த்தோம். இது சித்தர்களால் “நாள் ஒழுக்கம்” என்று விளக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையாக அமைந்தது. உதாரணமாக எப்போது துயில் எழுவது, எதனைக் கொண்டு வாய் தூய்மை செய்வது, எண்ணெய்க் குளியல், உணவு உண்ணும் நேரம் போன்ற ஒரு நாளில் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளை அறிந்தோம். தவிர உணவு, உடற்பயிற்சி, பெண்களின் ஒழுக்கம் போன்ற சில முக்கிய பகுதிகளை நாம் விரிவாக பின்பு பார்க்க உள்ளோம்.

 

அதற்கிடையே சித்தர்களால் “பிணி அணுகா விதி”  என்ற தலைப்பில் கூறப்பட்ட சிலவற்றைப் பார்க்க உள்ளோம். இவையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லா தமிழர் இல்லங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தவை. இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருபவை.

 

ஒரு ஆண்டு முழுவதும் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்களைக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நோய் நம்மை நெருங்காது என சித்தர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அவையாவும் ஒரு ஆண்டு முழுவதும் நிகழும் பருவ மாற்றங்களை  (Circannual rhythm )  ஒட்டியே இருக்கும்.

 

அவற்றில் முக்கியமானவை:

 

1. நாள் இரண்டு முறை      –  1. உணவு   2. மலங்கழித்தல்

2. அறு நீர்                   -  ஆறு வேளை சிறுநீர் கழிக்க

3. வாரம் இரண்டு முறை     –

  1. எண்ணெய் இட்டுக் குளித்தல்
  2. கண் மை யிடுதல் ( அஞ்சனம் )

4. வாரம் ஒரு முறை – சவரம் செய்தல் ( Shave )

5. மாதம் ஒரு முறை – உடலுறவு

6. 45 நாட்களுக் கொருமுறை – மூக்கில் மருந்து விடல் (நசியம்)

7. 4 மாதத்திற்கு ஒரு முறை – பேதி மருத்துவம் மேற்கொள்ளல்.

8. 6 மாதத்திற்கு ஒரு முறை – வாந்தி மருத்துவம் மேற்கொள்ளல்.

 

மேற்கூறியவாறு ஒழுக்க முறைகளை நாம் மேற்கொள்ளும் வழியினை ஒவ்வொன்றாக இனி வரும் வாரங்களில் காண உள்ளோம்.

 

ஒரு நாளில் ஏற்படும் உடல் மாற்ற நிகழ்வுகள் புறச் சூழல்களால் பாதிப்படைகின்றன. இதே போன்று ஆண்டு முழுவதும் ஏற்படக்கூடிய பருவ மாற்றங்கள் ( Circannual rhythm ), கோள்களின் மாற்றங்கள் போன்றவற்றிற் கேற்றவாரும் உடலின் நிகழ்வுகள் மிகவும் நுட்பமாக பாதிப்படைகின்றன. தவிர உடலிற்குள் நிகழும் ஏராளமான இயக்கங்கள் மற்றும் அவற்றின் தொடர்ச்சியாக உடலில் ஏற்படும் மாற்றங்களால் இயல்பாகவே உடல் இயங்கியலில் சீரமைப்பு பாதிக்கப்படுகின்றன. இவற்றை சீராக்குவதே சித்தர்களால் வகுக்கப்பட்ட “பிணி அணுகா விதிஆகும்.

 

சித்த மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயர்கள் பெரும்பாலும் பிணியணுகா விதியினை மேற்கொள்ளதவர்களாவே யிருப்பர்கள். எனவே சித்த மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கும் முன் மேற்கூறிய முறைகளில் பேதி மருத்துவத்தையோ, வாந்தி மருத்துவத்தையோ, நசிய ( மூக்கில் மருந்து விடும் ) மருத்துவத்தையோ நோயர்களுக்கு வழங்குவர்.

 

பேதி மருத்துவத்தால் வளி ( வாயு, வாதம், காற்று ) தொடர்பான உடல் நோய்களும் வாந்தி மருத்துவத்தால் அழல் ( சூடு, பித்தம், நெருப்பு ) தொடர்பான நோய்களும் நசிய மருத்துவத்தால் ஐயம் ( குளிர்ச்சி, கபம், நீர் ) தொடர்பான நோய்களும் கட்டுப்படும்.

 

இந்த மருத்துவ முறைகளால் ஏழு உடற்கட்டுகளில் தங்கியிருக்கக் கூடிய நுட்பமான நச்சுக்கள் வெளியேற்றப் படும். உயிர் ஆற்றல் சீராகும்.

இது போன்ற பிணியணுகா விதியினை எல்லோரும் முறைப்படி கடைப்பிடிக்கத் தொடங்கினால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மருத்துவர்களுக்கு வேலையும் குறையும். நோயில்லா வாழ்விற்காக சித்தர்கள் வகுத்த விதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இனி வரும் வாரங்களில் காண உள்ளோம்.

 

நலப்பயணம் தொடரும்.....................

by Swathi   on 09 Feb 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   சித்த மருத்துவம்   Protect our Body   நோய்கள் வராமல் இருக்க   ஆரோக்கியமான வாழ்வு பெற        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.