|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் - 22 |
||||||||
நோய் அணுகாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் – அறிமுகம்
ஒரு நாள் முழுவதும் நாம் செய்து கொண்டிருக்கும் சில செயல்களை எவ்வாறு சரியாகச் செய்ய வேண்டும் என இது வரை பார்த்தோம். இது சித்தர்களால் “நாள் ஒழுக்கம்” என்று விளக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையாக அமைந்தது. உதாரணமாக எப்போது துயில் எழுவது, எதனைக் கொண்டு வாய் தூய்மை செய்வது, எண்ணெய்க் குளியல், உணவு உண்ணும் நேரம் போன்ற ஒரு நாளில் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளை அறிந்தோம். தவிர உணவு, உடற்பயிற்சி, பெண்களின் ஒழுக்கம் போன்ற சில முக்கிய பகுதிகளை நாம் விரிவாக பின்பு பார்க்க உள்ளோம்.
அதற்கிடையே சித்தர்களால் “பிணி அணுகா விதி” என்ற தலைப்பில் கூறப்பட்ட சிலவற்றைப் பார்க்க உள்ளோம். இவையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லா தமிழர் இல்லங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தவை. இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருபவை.
ஒரு ஆண்டு முழுவதும் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்களைக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நோய் நம்மை நெருங்காது என சித்தர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அவையாவும் ஒரு ஆண்டு முழுவதும் நிகழும் பருவ மாற்றங்களை (Circannual rhythm ) ஒட்டியே இருக்கும்.
அவற்றில் முக்கியமானவை:
1. நாள் இரண்டு முறை – 1. உணவு 2. மலங்கழித்தல்
2. அறு நீர் - ஆறு வேளை சிறுநீர் கழிக்க
3. வாரம் இரண்டு முறை –
4. வாரம் ஒரு முறை – சவரம் செய்தல் ( Shave )
5. மாதம் ஒரு முறை – உடலுறவு
6. 45 நாட்களுக் கொருமுறை – மூக்கில் மருந்து விடல் (நசியம்)
7. 4 மாதத்திற்கு ஒரு முறை – பேதி மருத்துவம் மேற்கொள்ளல்.
8. 6 மாதத்திற்கு ஒரு முறை – வாந்தி மருத்துவம் மேற்கொள்ளல்.
மேற்கூறியவாறு ஒழுக்க முறைகளை நாம் மேற்கொள்ளும் வழியினை ஒவ்வொன்றாக இனி வரும் வாரங்களில் காண உள்ளோம்.
ஒரு நாளில் ஏற்படும் உடல் மாற்ற நிகழ்வுகள் புறச் சூழல்களால் பாதிப்படைகின்றன. இதே போன்று ஆண்டு முழுவதும் ஏற்படக்கூடிய பருவ மாற்றங்கள் ( Circannual rhythm ), கோள்களின் மாற்றங்கள் போன்றவற்றிற் கேற்றவாரும் உடலின் நிகழ்வுகள் மிகவும் நுட்பமாக பாதிப்படைகின்றன. தவிர உடலிற்குள் நிகழும் ஏராளமான இயக்கங்கள் மற்றும் அவற்றின் தொடர்ச்சியாக உடலில் ஏற்படும் மாற்றங்களால் இயல்பாகவே உடல் இயங்கியலில் சீரமைப்பு பாதிக்கப்படுகின்றன. இவற்றை சீராக்குவதே சித்தர்களால் வகுக்கப்பட்ட “பிணி அணுகா விதி” ஆகும்.
சித்த மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயர்கள் பெரும்பாலும் பிணியணுகா விதியினை மேற்கொள்ளதவர்களாவே யிருப்பர்கள். எனவே சித்த மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கும் முன் மேற்கூறிய முறைகளில் பேதி மருத்துவத்தையோ, வாந்தி மருத்துவத்தையோ, நசிய ( மூக்கில் மருந்து விடும் ) மருத்துவத்தையோ நோயர்களுக்கு வழங்குவர்.
பேதி மருத்துவத்தால் வளி ( வாயு, வாதம், காற்று ) தொடர்பான உடல் நோய்களும் வாந்தி மருத்துவத்தால் அழல் ( சூடு, பித்தம், நெருப்பு ) தொடர்பான நோய்களும் நசிய மருத்துவத்தால் ஐயம் ( குளிர்ச்சி, கபம், நீர் ) தொடர்பான நோய்களும் கட்டுப்படும்.
இந்த மருத்துவ முறைகளால் ஏழு உடற்கட்டுகளில் தங்கியிருக்கக் கூடிய நுட்பமான நச்சுக்கள் வெளியேற்றப் படும். உயிர் ஆற்றல் சீராகும்.
இது போன்ற பிணியணுகா விதியினை எல்லோரும் முறைப்படி கடைப்பிடிக்கத் தொடங்கினால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மருத்துவர்களுக்கு வேலையும் குறையும். நோயில்லா வாழ்விற்காக சித்தர்கள் வகுத்த விதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இனி வரும் வாரங்களில் காண உள்ளோம்.
நலப்பயணம் தொடரும்..................... |
||||||||
by Swathi on 09 Feb 2015 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் Protect our Body நோய்கள் வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்வு பெற | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|