LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23

பேதி மருத்துவம் – அறிமுகம்


குடலைக் கழுவி உடலை வளர் ‘ என்பது தமிழர் பழமொழி. குடல் தூய்மையாய் இருப்பதன் முக்கியத்துவத்தை சித்தர்கள் உணர்ந்து பேதி மருத்துவத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார்கள்.

 

சித்த மருத்துவத்தை மேற்கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் முதலில் பேதி மருத்துவத்தைக் கொடுத்து  விட்டுதான் மற்ற மருத்துவ முறைகளை மேற்கொள்ளச் செய்வோம். ஏனெனில் பல காலமாக அந்த நோயர்கள் பேதி மருத்துவத்தை மேற்கொண்டிருப்பதில்லை. சிலர் பிறந்ததிலிருந்தே இந்த மருத்துவமுறையை நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாது எனக் கூறுகின்றனர். பாரம்பரியம் மிக்கதான தமிழரின் நோய்வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஒரு தமிழன் கேள்விப்பட்டதுகூட கிடையாது என்பது வியப்பான உண்மை. அதிலும் ஒருபடி மேலே போய் சிலர் இந்த மருத்துவ முறையினை ஏளனம் செய்வதும் இந்த முறையால் யாதொரு நன்மையும் கிடையாது என்று கூறுவதும் வேதனையாகும். இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதனைத் தாம் பின்பற்றுவதோடு தமக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.

 

பேதி மருத்துவம் என்று முதலில் கேள்விப் படுபவர்கள் அதனை மேற்கொள்ள தயங்குவர். ஆனால் ஒருமுறை அம்மருத்துவத்தை மேற்கொண்டவர்கள், தம் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் அம் மருந்தினை பெற்றுச் செல்வார்கள். அவர்களும் அடுத்த நான்காவது மாதம் அவர்களுக்கும் பெற்றுச் செல்வார்கள்.

 

பலர் இந்த உயரிய மருத்துவ முறையினை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் சிலருக்குத் தயக்கம் இருந்து வருகின்றது. அந்த மருத்துவ முறையினால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சமே தயக்கத்திற்க்குக் காரணம். உடல் சோர்வு, நீர்ச்சத்து குறைவு நிலை (Dehydration), குடல், வயிறு பாதிப்புகள், மயக்கம், படபடப்பு, வயிற்று வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வேறு மருந்துகளை நாட வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கு இன்னும் உள்ளது. அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பது என்னவெனில் இது உடம்பினைத் தூய்மைப் படுத்தி மேன்மையடையச் செய்யும் காய கற்ப முறையாகும். ( காய கற்ப – உடம்பினை கல்சிலை போல் உறுதியாக்கும் மருத்துவமுறை )

 

முன்பு காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூய்மையான விளக் கெண்ணெய்யை அதிகாலையில் குடித்து விட்டு அன்று முழுவதும் பத்தியம் காத்து குடல் முழுவதும் தூய்மையானதும் மதியத்திற்கு மேல் பத்திய உணவு உண்ணும் பழக்கம் இருந்து வந்தது. இன்றும் கிராமங்களில் இந்தப் பழக்கம் இருந்து வருகின்றது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் விளக்கெண்ணை குடித்த அனுபவத்தை அழகாக வர்ணிப்பார்கள். அதனையே இப்போது நாங்கள் சித்தர் நூல்களின் உதவியோடு எங்களை நாடி வரும் நோயர்களுக்கு மருந்துகளாகக் கொடுத்து வருகின்றோம். அப்படிச் செய்யும் போது குடல் தூய்மையாவதுடன் மருந்துப் பொருட்களின் நுட்பமான மூலக்கூறுகள் உட்கிரகிக்கப்பட்டு உடல் முழுவதும் பரவி உச்சி முதல் பாதம் வரை நிரவியுள்ள மாசுக்கள் உடலை விட்டு வெளியேற வழிவகை செய்கின்றன.

 

உடல் மிகவும் நுட்பமாக இயங்கும் ஓர் அற்புதப் படைப்பு என ஏற்கனவே பார்த்துள்ளோம். உடலில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் ஆற்றல் உடலிற்கே உண்டு. அதே போன்று உடலில் தங்கியுள்ள மாசுக்களை நீக்கும் ஆற்றல் உடலிற்கு உண்டு. என்றாலும் அது தன்னைத்தானே சுத்திகரிக்கும் ஆற்றலை மேம்படுத்தவும் உயிர் ஆற்றலின் ( Life force ) வேகத்தினை மேம்படுத்தவும் பேதி மருத்துவமும் வாந்தி மருத்துவமும் மற்றும் நசிய மருத்துவமும் ( மூக்கில் மருந்திடல் ) உதவியாகின்றது.

 

மேலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் முழுமையும் நச்சுத்தன்மை உருவாக வாய்ப்புள்ளதாக இக்கால பல ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நஞ்சுக்கள் இரத்த ஓட்டக் குறைப்பட்டையும் குடல் இயக்கக் குறைபாட்டையும் நிணநீர் ஓட்டக் குறைப்பாட்டையும் ஏற்படுத்தும். இதனால் சாதாரண பசிமந்தம், சுரம், தலைவலி முதல் புற்று நோய், இதய நோய்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளன. அதாவது இந்த நச்சுப் பொருட்கள் ஒருவரின் வாழ்நாளைக் குறைக்கச் செய்வதோடு நல வாழ்வையும் சீர் குலைக்கும்.

 

பேதி மருத்துவத்தின் அவசியத்தை பல இக்கால ஆய்வுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

பேதி மருத்துவம் எப்படிச் செய்ய வேண்டும் ? அதன் பலன்கள் என்னென்ன ? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

நலப்பயணம்  தொடரும்............

by Swathi   on 16 Feb 2015  0 Comments
Tags: சித்த மருத்துவம்   Siddha Maruthuvam   Purgative Treatment   Bethi Marunthu   பேதி   பேதி மருந்து     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.