LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : எண்ணெய் இட்டு குளித்தல் – நன்மைகள்– 15

எண்ணெய் இட்டு குளித்தல் – நன்மைகள்

எண்ணெயிட்டுக் குளிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலில் ஏற்படுகின்றன. உடலின் இயல்பான இயக்கம் சீராவதற்கு எண்ணெய்க் குளியல் உதவுகின்றது. முதல் அத்தியாயங்களில் பார்த்த உடற்கட்டுக்கள் ( உடல் கட்டமைப்பு – சாரம், செந்நீர், ஊன், எலும்பு, கொழுப்பு, மூளை, சுக்கிலம் ) இயக்கம் எண்ணெய்க் குளியலால் மேம்படுகின்றது. இந்த ஏழு உடற்கட்டுக்களில் நுட்பமாகத் தங்கியுள்ள மாசுகள் நீங்குகின்றன. உணவுகள், செயல்கள் மூலமாகவும் நோய்கள் மூலமாகவும் இயல்பான வளர்சிதை மாற்ற நிகழ்வுகளாலும் இந்த உடற்கட்டுக்களில் மலினங்கள் தங்குகின்றன. அவற்றில் முக்கியமானது முற்றுப்பெறாத அயனிகள் ( Free Radicals ). இவற்றை உடலிலிருந்து வேகமாக நீக்கும் ஆற்றல் எண்ணெய்க் குளியலுக்கு உண்டு.

 உடலில் தேய்க்கும் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள், இயற்கையான தாவர வேதிப் பொருட்கள் (Phyto chemicals), பிற நுண் ஊட்டச் சத்துக்கள் ( Micro nutrients ) மிகவும் நுட்பமான முறையில் உடலால் உட்கிரகிக்கப் படுகின்றது. கண், காது போன்ற துளைகளிலும் தோலிலும் ஊறக்கூடிய எண்ணெயிலுள்ள நுண் சத்துக்கள் (Nano materials) உட்கிரகிக்கப்படுவது போன்றே உடலில் உட்புறமுள்ள கழிவுகளும் வெளியேறுகின்றது. இவ்வாறாக ஏழு உடற்கட்டுக்களும் தூய்மையாகின்றது.

 இதுபோன்றே உடலை இயக்கக்கூடிய உயிர் ஆற்றல்களாகிய வளி, அழல், ஐயம் ( விளக்கம் உயிர் என்ற அத்தியாயத்தில் உள்ளது ) என்பவையும் சீராகின்றது. இந்த மூன்று உயிர் ஆற்றல்களும் கூடாமல் குறையாமல் தத்தம் இயல்போடு இயங்கினால்தான் நோயில்லா வாழ்வு கிடைக்கும். இக்கால கட்டத்தில் ஆற்றல்களையும் இயல்பு நிலையில் பாதுகாப்பது சற்று கடினமானது. வாரம் இருமுறை எண்ணெயிட்டு குளிப்பதால் அவற்றை இயல்பான நிலையில் பாதுகாக்கலாம். உடலின் கட்டமைப்பும், உடல் இயக்கமும் ( Structure & Functions ) சீராவதற்கு எண்ணெய்க் குளியல் அவசியமாகின்றது.

  பொதுவான நன்மைகள்

 1.  உடல் இளமையோடு இருக்கச் செய்வதற்கு எண்ணெய்க் குளியல் உதவுகிறது.

2.  தோலிற்கும் தசைக்கும் இரத்த ஓட்டம் சீராவதால் தோல் சுருக்கம் விரைவாக நீங்கி தோல் பளபளப்புடன் இருக்கும். தோல் நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும்.

(i) நல்லெண்ணெயில் வைட்டமின் E, லினோலிக் அமிலம், ஸ்டியரிக் அமிலம், பால்மிடிக் அமிலம் (  Vitamin E, Lenoleic acid, Stearic acids, Palmitic acid ) போன்ற சத்துக்கள் இருக்கின்றன. எனவே  நல்லேண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும், தளர்ச்சியுடனும் பாதுகாக்கப்படுகின்றது.

 (ii) தோலிற்கு இயற்கையான கவசமாக இந்த எண்ணெய் விளங்குகின்றது. வேதிப் பொருட்களாலான பொருட்களை ( Chemical based sunscreen ) பயன்படுத்துவதால் தோல் கேடைடைகின்றது.

 (iii)ஏற்கனவே தோலில் பிரச்சனைகள் இருந்தால் மிளகு சேர்த்தோ சில மூலிகைகள் சேர்த்தோ காய்ச்சி பயன்படுத்தலாம். அதற்கு சித்த மருத்துவரின் ஆலோசனை தேவை.

3.  தோலில் தங்கியிருக்கும் நுண் மாசுகள் நீங்குகின்றது. முடி வேர்ப்பகுதியில் தங்கியிருக்கும் மாசுகள் பல சாதாரணக் குளியலால் நீங்காது. எண்ணெய்க் குளியலால் தோல் முழுமையும் தூய்மையுமாகும்.

4.  உடல் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள், இதய இயக்கம், சுவாச நிகழ்வுகள், குடல் இயக்கம், நாளமில்லாச் சுரப்புகள் ( Hormones ) இயக்கம், மூட்டுக்கள் ( Joints ) இயக்கம் சீராகின்றது. இயல்பான பசி உண்டாகி சீரண மண்டலம் சிறப்பாக இயங்குகின்றது. உணவின் சுவையினை முழுமையாக உணர முடியும்.

5.  மூளை நரம்பு மண்டலம் சீராகின்றது. மன ஆற்றல் மேம்படுகின்றது. இயல்பான உறக்கம் உண்டாகின்றது.

6.  முடியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் ( முடி உதிரல், வெள்ளை முடி, முடி நுனி வெடிப்பு போன்றவை ) முற்றிலும் நீங்குகின்றது. பொடுகு, தலை அரிப்பு போன்றவை நீங்கி அடர்த்தியான கருமையான முடி வளரும்.

7.  கண் பார்வை பாதுகாக்கப் படுகிறது. கண்வறட்சி நீங்கி கண்ணின் இயக்கம் சீராகின்றது.

8.  இரத்த ஓட்டம் சீராவதால் இரத்த அழுத்தம் இயல்புக்கு வருகின்றது. எண்ணெய்க் குளியலால் அதி இரத்த அழுத்தம் ( Hyper tension ) இயல்பு நிலைக்கு வருவதைப் பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

9.  சர்க்கரை நோயின் ( Diabetes mellitus ) பின் விளைவுகளைத் தடுக்க எண்ணெய்க் குளியல் அவசியமாகின்றது. 

10. உடல் பருமன் ( Obesity ) எண்ணெய்க் குளியலால் கட்டுப்படுகின்றது. 

11. பல நோய்களை தடுக்கும் ஆற்றல் எண்ணெய்க் குளியலுக்கு உண்டு. அதுபோல் நோய் வந்த பின்பும் மருந்துகள் பயன்படுத்துவதோடு தகுந்த மூலிகை எண்ணெயினை  பயன்படுத்துவதால் நோயை வேகமாக உடலை விட்டு நீக்கும் ஆற்றலும் எண்ணெய்க் குளியலுக்கு உண்டு.

 நலப்பயணம் தொடரும்.................

 

 

by Swathi   on 22 Dec 2014  0 Comments
Tags: Ennai Kuliyal   எண்ணைக்குளியல்   Siddha Maruthuvam   சித்த மருத்துவம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.