LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49

மூச்சுக்காற்று (சுவாச) இயக்கம் என்பது உயிருக்கு ஊட்டமளிக்கும் நிகழ்வாகும்.  இதனை முழுவதும் தடுத்தாலும் மூச்சியக்கம் இடைடையே தடைபட்டாலும் முறையான பயிற்சியில்லாமல் பிராணாயாமம் செய்தாலும் உயிர் ஆற்றல்  (Life force) பாதிக்கப்படும்.

நலமாக வாழ்ந்து கொண்டுள்ள ஒருவர் வேண்டுமென்றே நீண்ட நேரம் மூச்சு இயக்கத்தை நிறுத்தமுடியாது.  நீண்ட நேரம் மூச்சை தாமாகவே நிறுத்தினால் மயக்கம் ஏற்படும்.  மயங்கிய பின்னர் மூச்சியக்கம் தாமாகவே நிகழத் தொடங்கும்.  நீரில் அமிழ்தல், கழுத்து இறுகுதல் போன்ற நிலைமைகள் இருந்தால் மட்டுமே இறப்பு நேரும்.

வாழும் இடத்திலும், பணி செய்யும் இடங்களிலும் போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.  போதுமான காற்றோட்டம் இல்லாமலிருப்பதும் வேறு பல காரணங்களால் ஆழ்ந்த மூச்சு இழுத்து விடாமலிருத்தலும் பாதிப்புகள் ஏற்படும்.

மூச்சியக்கம் தடைபட்டால் ஏற்படும் நோய்களைக் க்ழ்க்கண்ட சித்தர் பாடல் விளக்குகின்றது.

“சுவாசத்தை யடக்கினாலோ தொடர்ந்திடுமிருமல் நோயே
பவசமாய் வயிறு பொருமிப் பண்பினாக்கருசியாகிக்
கவசமாய்க் குலையிடிப்புக் காய்ச்சலும் வெட்டையாகித்
தவசமாய் வாயு தன்னில் தருங்குணமிவைகளாமே”.

சுவாசத்தை அடக்கினால் நுரையீரல் மற்றும் மூச்சுப் பாதை பாதிப்படைந்து இருமல் தொடரும்.

வயிறு பொருமல் ஏற்பட்டு வயிற்றில் காற்று அதிகம் சேர்ந்து வீங்கும்.  சீரண மண்டலம் பாதிக்கப்படும்.  நாக்கு சுவை அறியும் தன்மையை இழக்கும்.

வயிற்று வலி, உடல் வலி, காய்ச்சல் உண்டாகும்.

உடல்சூடு அதிகமாகி உள் உறுப்புப்க்களின் இயக்கம் சீர் கெடும்.

இதுவே இப்பாடலின் விளக்கம்.

மூச்சு இயக்கம் தடைபடுவதால் ஏற்படும் துன்பங்கள்

1. முதலில் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகின்றது.  மூளையிலிருக்கும் பல இலட்சம் நரம்பு செல்களுக்கு போதுமான ஊட்டம் மற்றும் ஆற்றல் கிடைக்காமல் போவதால் அவற்றின் இயக்கம் குறையும்.  மீண்டும் காற்று போதுமான அளவு கிடைத்தாலும் மூளை இயல்பு நிலையை அடைய நீண்டகாலமாகும்.

2. மூளையின் உயர் அறிவாற்றல் பாதிபடைகின்றது.  இதனால் முடிவெடுக்கும் தன்மை, ஒரு முகப்படுத்தும் தன்மை, புதிய உத்திகளை உருவாக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றன. மொழியறிவாற்றலும் குறைகின்றது.

3. ஆழ்ந்த மூச்சுவிட்டு வெளிவிடும்போது உடலில் உள்ள எதிர்வினையாற்றல் (Negative force) வெளியேறும்.  பிராண வாயு (Oxygen) உள்ளிழுக்கப்படுவது போன்று பிற நன்மை செய்யும் வாயுக்களும் (காட்டாக  Nitric oxide)  உடலிற்குள் செல்லும்.  உடலின் அமில-கார சமநிலை (Acid – base balance) பாதுகாக்கப்படும்.  இந்த நல்ல நிகழ்வுகள் தடுக்கப்படுவதால் சிறு பிரச்சனைகள் (தலைவலி, உடல்வலி) முதல் பெரிய நோய்கள் (cancer, heart diseases) வரை ஏற்பட வாய்ப்புள்ளது.

4. நரம்பு மண்டலம் தளர்வடைகின்றது. நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு உடல் தடுமாற்றம் ஏற்படும்.

5. மூச்சுப்பதையில் உள்ள சிறு சிறு குழல்களும் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகின்றது (rigid airway).

6. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகின்றது (Stiff blood vessels - Arteriosclerosis).

7. உடலின் அடிப்படை ஆற்றல் குறைவுபடுகின்றது.

எனவே எப்போதும் ஆழ்ந்து மூச்சு விடப் பழக வேண்டும்.  மூச்சுக்காற்று நுரையீரல் முழுவதும் நிரம்பினால் உயிர் ஆற்றல் வலுப்படும்.  இதற்கு வளி நிலைப் பயிற்சி எனப்படும் பிராணாயாமம் வழியாக இருக்கும்.
    
இதுவரை உடல் வேகங்களை அடக்காமல் இருப்பதால் என்னென்ன நன்மைகள் அடையலாம் என அறிந்தோம்.  மலம், உறக்கம் இரண்டையும் முன்பே நாள் ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் பார்த்துவிட்டோம்.  

உடல் வேகங்களைத் (இயல்பான உடல் இயக்கங்களை) தடை செய்யக்கூடாது என்ற தலைப்பில் இங்கு நாம் தெரிந்துகொண்ட கருத்துக்களைப் பின்பற்றினால் அது நலமான நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.       

by Swathi   on 19 Aug 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   Moochu Kaatru   மூச்சுக்காற்று   சித்த மருத்துவம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.