LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – தொடர்ச்சி – 29

சென்ற வாரம் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால் வரும் கண் பாதிப்புகளும் அதனைத் தடுப்பதற்கான எளிய மருத்துவமுறைகளையும் பார்த்தோம். இந்த வாரம் பொதுவாக கண்களைத் தாக்கக் கூடிய காரணிகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளைக் காண உள்ளோம். இவைகளை கடைபிடித்தால் கண் ஒளி பெருகும். கண் தசைகளும், நரம்புகளும் பலப்படும். கண்களுக்கு இரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

கண்களைத் தாக்கும் காரணிகளிலிருந்து தற்காத்துக் கொள்ளல்

1. மின் எந்திரங்களில் கண்களைத் தாக்கும் கதிர்களைக் குறைவாக உமிழும் சாதனங்களைப் பார்த்து வாங்குதல் வேண்டும். (காட்டாக Liquid Crystal Display – LCD).

2. Laptops, Desktops, Smart phones, Tablets, e – readers போன்றவற்றை பயன்படுத்தும் போது 24 அங்குலம் தள்ளி இருக்க வேண்டும். அதாவது நாம் கையை நீட்டினால் விரல் மின் உபகரணத்தின் திரை இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். கண்ணிற்கும் திரைக்குமான கோணம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

3. சர்க்கரை நோய் (Diabetes mellitus) இரத்த கொதிப்பு (Hypertension), இரத்தக் குழாய் நோய்கள் (Vascular diseases) போன்ற நோய்களுக்கு முறையான மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும். எவ்வித மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கீரை, காய், பயிறு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் (விளக்கம் பின்பு விரிவாக உள்ளது). இங்கு கூறும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

4. புகைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்ற போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.

5. ஏதேனும் நோய்க்காக மருந்துகள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய அவசியமிருந்தால் குறிப்பிட்ட இடைவேளையில் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுக் தொடர வேண்டும்.

6. தரமான கண்ணாடிகளைப் பயன்படுத்துவதால் மின் உபகரண பாதிப்பிலிருந்தும், புகை, தூசு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஓய்வு

1. 7 மணி நேர உறக்கம் கண்களைப் பாதுகாக்கும். யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்வதால் உறக்க நேர அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

2. கணினி போன்ற மின் எந்திரங்களைப் பார்த்துக் கொண்டே வேளை செய்பவர்கள் 20 – 20 – 20 என்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதாவது 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகள் பார்ப்பதால் கண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.

3. 90 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை மூடி 1 நிமிடம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

4. கண் இமைகளை அடிக்கடி இமைப்பதனால் கண்களுக்கு ஓய்வும் கிடைக்கும். கண்ணீர் சுரந்து கண் வறட்சி நீங்கும்.

கண் பயிற்சி, உடற் பயிற்சி, யோகப் பயிற்சி

1. வெறும் காலுடன் நடை பயிற்சி செய்வதால் கண்களுக்குப் போதிய இரத்த ஓட்டம் பாய்வதாலும் கால் பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப் படுவதாலும் பார்வைத் திறன் மேம்படுகின்றது.

2. நீச்சல் பயிற்சி, விளையாட்டுகள் எல்லாமே பார்வைத் திறனை மேம்படுத்தும்.

3. முறையாக கற்று செய்யப்படும் மூச்சுப் பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் பார்வைத் திறனை மேம்படுத்துகின்றன.

4. ஒரு சிறு குச்சியினை (அல்லது பென்சில், பேனா) இரண்டு ஆள் காட்டி விரல்களின் மத்தியிலிருக்குமாறு பிடித்து கையினை நீட்டி வைத்துக் கொண்டு அந்தக் குச்சியினைப் பார்க்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாக அந்தக் குச்சியினை மூக்கு நுனியினை நோக்கி நகர்த்த வேண்டும். பார்வையை குச்சியிலிருந்து விலக்கக் கூடாது. குச்சி மூக்கு நுனிக்கு வந்தவுடன் சிறிது சிறிதாக கைகளை நீட்டி குச்சியினை விலக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இது போல காலை 10 முறை மாலை 10 முறை செய்தல் வேண்டும்.

5. கண்சுழற்சிப் பயிற்சி : கண்களை எவ்வளவு தூரத்திற்கு விரிவாகச் சுழற்ற முடியுமோ அவ்வளவு விரிவாகக் கடிகாரப் பாதையிலும் எதிர்புறமாகவும் 6 முறை சுழற்ற வேண்டும்.

6. கண்களை மூடித் திறத்தல் : 20 லிருந்து 30 முறை செய்தல் வேண்டும்.

7. சூரிய ஒளியில் கண்பயிற்சி

அ) நேரடியாகச் சூரியனைப் பார்க்கக் கூடாது. கை விரல்களை பலகணி போலப் பின்னிக் கொண்டு அதன் வழியாக காலை 7.30 க்கு முன்பாகச் சூரியனைப் பார்க்க வேண்டும். 2 நிமிடங்கள் வரை பார்க்கலாம்.

ஆ) கண்களை மூடிக் கண்டு சூரிய ஒளி நோக்கி 3 நிமிடங்கள் நிற்க வேண்டும். அப்போது நேரடியாக சூரிய ஒளி படும் அதே வேலையில் மூச்சு சீராகவும் ஆழ்ந்தும் இருக்க வேண்டும். அதன் பின்பாக உள்ளங்கைகளால் கண்களை இலேசாக அழுத்தி விடல் வேண்டும். கசக்கக் கூடாது.


8. நிலவு பார்த்தல் :

சூரியனைப் பார்ப்பது போன்றே நிலவினையும் பார்க்கலாம். வெறும் கண்ணிலும் பார்க்கலாம். கை விரல்களைப் பலகணி போன்று அமைத்துக் கொண்டு அதன் வழியேயும் பார்க்கலாம்.
வெகு தொலைவில் உள்ள ஒரு பொருளை ஒரு முகத்துடன் பார்ப்பது பார்வைத்திறனை மேம்படுத்துவதோடு மன ஆற்றலையும் மேம்படுத்தும்.


9. மென்மையாக அழுத்துதல்

அ) புருவத்தின் தொடக்கம், புருவத்தின் நடுப்பகுதி, புருவத்தின் ஓரம் இவ்விடங்களில் இலேசாக அழுத்தம் கொடுத்துத் தடவுவதால் கண் பார்வைத் திறன் மேம்படும். இரண்டு கை பெருவிரல்களை அல்லது ஆள் காட்டி விரல்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

ஆ) இரண்டு கண்களின் இரண்டு பக்கங்களிலும் மென்மையாக அழுத்துதல்

இ) கண்களின் கீழ் ஓரங்களில் மென்மையாகத் தடவி விடல் வேண்டும்.


கண் பயிற்சிகள்

சூரிய ஒளி, நிலவு பார்த்தல், மென்மையாக தடவுதல் போன்ற முறைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய் போன்ற ஏதேனும் ஒன்றினை கண்களிலும் கண்களைச் சுற்றியும் தடவிப் பின்பு அப்பயிற்சிகளைச் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

உணவு

1. கீரைகளின் சாறு (முருங்கை, பொன்னாங்காணி, கரிசாலை, கறிவேப்பிலை போன்றவை) பச்சையாகவும், இரசம் போலக் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

2. இரண்டு அல்லது மூன்று பச்சைக் காய்களை கட்டாயம் உணவுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

3. பல வண்ணங்களிலான பழங்கள் அனைத்துமே கண் பார்வைத் திறனை மேம்படுத்துவையே.

4. பாசிப்பயிறு, வேர்க்கடலை, உளுந்து, பாதாம், பருப்பு போன்ற பருப்பு வகைகளை பச்சையாகவும் ஊற வைத்து முளை கட்டியும் சாப்பிட்டால் கண் ஒளி பெருகும்.

5. தேங்காய், தேங்காய் நெய், நல்லெண்ணெய், பசு நெய், பசு மோர், அலிசி விதை (FLAX SEED) போன்றவை கண்களை பாதுகாக்கும் பொருட்களாகும்.

இவைகளில் உள்ள Beta Carotene, Omega 3 Fatty acid, Doc Sahexaenoic acid (DHA), Vitamin C, E, B Complex, நாகம் (Zinc), தாமிரம் (Copper), இரும்பு (Iron) போன்ற நுண் ஊட்டச் சத்துக்கள் கண் ஒளியினைப் பெருக்கவதாய் பல இக்கால ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

6. தவிர்க்க வேண்டிய உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ரஜனூட்டப்பட்ட எண்ணெய்கள் (Refined oils, Hydrogenated oils), பேக்கரி பொருட்கள் (Baked items – Cookies, fired biscuits etc), பொறித்த மாமிச உணவுகள் (Fried fish, Chicken etc), செயற்கை நிறமிகள் (Artificial colouring agents) போன்றவை கண்களைப் பாதிப்படையச் செய்யக் கூடிய பரவலாகப் பயன்படுத்தும் உணவுப் பொருட்களாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவ குணமுடைய பொருட்கள்

1. காபி, தேநீருக்கு பதிலாக சுக்குக் காபி பயன்படுத்தலாம். சுக்கு, மிளகு, சீரகம், தனிய (மல்லி விதை) ஏலக்காய், கிராம்பு, பனை வெல்லம் கலந்து தயாரிக்கும் குடிநீர் கண்களுக்குக் குளிர்ச்சியையும் நீர்த்துவதையும் கொடுக்கும். கண்களுக்கு நுண் ஊட்டச் சத்துக்களையும் வழங்கும். இது போலவே புதினாக் குடிநீர், பச்சை டீ (Green tea)  போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

2. சீரகம் அல்லது பெருஞ்சீரகப் பொடியுடன் தேன் கலந்து 2 வேளை சாப்பிட்டால் பார்வைத்திறன் கூடும்.

3. நெல்லிக்காய்ச் சாறுடனோ, நெல்லி வற்றல் பொடியுட தேன் கலந்து பருகுவதால் கண் பலப்படும்.]

4. திராட்சை தோல் விதையுடன் அரைத்துச் சாப்பிடுதல், நாட்டுத் தக்காளி தோலுடன் அரைத்துச் சாப்பிடுதல் போன்றவை கண்களுக்கு பார்வைத் திறனை மேம்படுத்தும்.

5. அதிமதுரப் போடி, கடுக்காய்ப் போடி சம அளவு கலந்த பொடியில் 1 தேக்கரண்டி 2 வேளை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதால் கண் பலம் அடையும்.

6. பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, வெந்தயம் போன்ற பொருட்கள் பார்வையைப் பாதுகாக்கும்.

7. ஆனைந்து (பஞ்ச கவ்யம்) கண்களில் விடுவதாலும் உள்ளே 1 தேக்கரண்டி சாப்பிடுவதாலும் கண் ஒளி பெருகும்.
இவைதவிர கண்ணோய் (Madras Eye)என்ற தலைப்பில் கூறிய கண் பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு எளிதானவைகள் மட்டும் இங்கே தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. இவற்றில் எத்தனைப் பயன்படுத்த இயலுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கண் ஒளியைப் பாதுகாப்போம்.

நலப்பயணம் தொடரும்..................

by Swathi   on 30 Mar 2015  2 Comments
Tags: சித்த மருத்துவம்   Siddha Maruthuvam   கண் பயிற்சி   கண் பாதுகாப்பு   Kan Pathukappu   Eye Protection     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
09-Apr-2015 02:22:23 முரளி தாஸ் said : Report Abuse
ரொம்ப நல்ல இருக்கு. தேவை ஆனா குறிப்புகள் தந்துள்ளிர்கள்
 
09-Apr-2015 02:22:20 முரளி தாஸ் said : Report Abuse
ரொம்ப நல்ல இருக்கு. தேவை ஆனா குறிப்புகள் தந்துள்ளிர்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.