LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

கால்கள் உடைந்திடாத சக்கரம்
காலத்தோடு சுழல்கிறது
பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ?

எல்லாம் மாறும்
காட்சிகளே பிறழ்கிறது; பின்
தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..?

வெற்றி உதிர்ந்திடாத மனங்களே
நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி
இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..?

வாழ்வது நிலைக்கலாம் நீளலாம்
சாவது ஒருமுறை யெனில்
தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..?

வாழும்போதெல்லாம் வெற்றிக்கு ஏங்கி
கடைசிவரை தோல்விக்கே பயந்துத் தீர்வதைவிட கொஞ்சம் வாழ்ந்துகொள் போதும்..

உறக்கத்தை சுமையாக்கி
பசியை பழகிக்கொள்
புகழ்ச்சியை பணத்தை கடந்துசெல்.,

பயமுட்களில்லா பாதையமை
சமூகத்தை அன்பொழுக நேசி
உன் வெற்றியை பிறர் வெற்றியாக்கு.,

இருப்பதை இயன்றவரைப் பகிர்ந்துகொள்
இல்லறத்தை  உண்மையின் கண்ணாடியாக்கு
நானிலத்தையும் அறம்கொண்டு அள.,

கண்களை முயற்சி சிவக்க திற
மனதை நம்பிக்கை கனக்க மூடு
பயணத்தை உழைப்பால் மட்டுமே தொடர்.,

உலகில் எவரும் முழு தீயவரில்லை
நம்புமளவு எல்லோருமே நல்லோருமில்லை
பின் யாரிங்கே உயர்வும்? தாழ்வும்?

எதிர்மறை உடை; சமத்துவம் ஏந்து
எதிரும் புதிரும் ஒன்றென அறி
இயற்கையை உனக்குள்ளிருந்து வெளியே பார்; பார்க்க பழகு

ஒருமுறையேனும் மன்னித்துவிடு
ஒருமுறையேனும் கொடுத்து மகிழ்
ஒருமுறையேனும் அன்பு செய்..

பிறகு எட்டித்தான் பாரேன்
ஒரு கணம் நீ
சிகரத்தைத் தொட்டிருப்பாய்;

அல்லது
சிகரம் வெற்றிகளின் கூடாரமாயுனைத் தொட்டுக்கொள்ள ஒரு தவமேனும் பூண்டிருக்கும்!!

வித்யாசாகர்

by Swathi   on 22 Mar 2018  1 Comments
Tags: Thannambikkai   Thannambikkai Tamil Kavithai   Motivational Kavithai   Tamil Motivational Kavithai   தன்னம்பிக்கை கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
வெற்றி உன் வசம் வெற்றி உன் வசம்
வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து
கருத்துகள்
30-Apr-2019 06:02:07 Hamshanthini said : Report Abuse
Vithyasagarin indha kavi warigal en ullaththai poorippakki uvagai paduththiyadhu Melum sirandha ennangaludun ungal kavi payanam thodara manamarndha vazhththu indha sirumiyin ullaththil irundhu.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.