தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சமீபத்தில் பீகார் உயர் நீதிமன்றம் நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடும் படி உத்தரவிட்டது.இதனை அடுத்து அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது, அனைவரின் அடிப்படை உரிமைதான், ஆனால் கட்டுப்பாடு ஏதும் இல்லாதது அல்ல. இதற்கு சில எல்லைகள் உண்டு.நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களின் உடமைக்கும், உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், நேர்முகத் தேர்வில் தோல்வியடைபவர்கள் அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் போக்கில் செயல்பட வாய்ப்புள்ளதால்,தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
|