நம்மை விட்டு பிரிந்தார் இயற்கை அறிவர் நம்மாழ்வார் !
இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் கூறும் நல்லுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ்ச் சமூகம் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தலைசிறந்த அறிவரை இழந்துள்ளது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாருக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின் நிலத்தை மலடாக்கும் திட்டத்தை எதிர்த்து , விவசாயிகள் நலனுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் பரப்புரைகள் மேற்கொண்ட நம்மாழ்வாரின் புகழ் தமிழகம் உள்ளவரை இவ்வுலகில் நிலைத்து வாழும்.
வலைத்தமிழ் இயற்கை போராளி நம்மாழ்வாருக்கு தன்னுடைய வீர வணக்கத்தை செலுத்துகிறது. வாழ்க நம்மாழ்வார் புகழ். அவர் ஏற்படுத்திய இயற்கை வேளாண்மை தத்துவத்தை, சுழற்சிமுறை பாரம்பரிய விவசாயத்தை இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ஐயாவின் கருத்துக்களை வலைத்தமிழ் தொடர்ந்து பாதுகாத்து மக்களிடம் எடுத்துச்செல்லும்.
|