|
||||||||||||||||||
நண்டு ரோஸ்ட்(Crab Roast) |
||||||||||||||||||
தேவையானவை : சுத்தம் செய்யப்பட்ட நண்டு - ஒரு கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 50 கிராம் இஞ்சி - 50 கிராம் சின்ன ஜீரகம் பொடி - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன் பெரிய ஜீரகம் பொடி - ஒரு டீஸ்பூன் எலும்பிச்சம் பழ சாரு - ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய் - 50 மிலி மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன் மல்லி பொடி - ஒரு டீஸ்பூன் மிளகு பொடி - ஒரு டீஸ்பூன் மல்லி கொத்து - சிறிது உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - தேவைகேற்ப செய்முறை : 1.முதலில் சுத்தம் செய்த நண்டை நன்றாக தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். பிறகு வெங்காயம்,தக்காளி பச்சை மிளகாய் இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 2.பிறகு இஞ்சி பூண்டுடன் சின்ன ஜீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அறைத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யை விட்டு மிதமான தீயில் வைக்கவும். 3.எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் முதலில் கொஞ்சம் கருவேப்பிலை போடவும்பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவைகளை போட்டு கிளறி விட்டு மிதமான தீயில் சுமார் 2 நிமிடம் மூடி வைக்கவும். 4.தயாராக வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு மீண்டும் நன்றாக கிளறவும்பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி, மிளகு பொடி மற்றும் பெரிய ஜீரகம் பொடி இவைகளை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி மிகவும் குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் மூடி வைக்கவும். 5.அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை போட்டு நன்றாக கிளறி மிதமான தீயில் சுமார் 10 நிமிடம் மூடி வைக்கவும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். 6.பாதி அளவு மூடியிட்டு மிக மிக குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் வைக்கவும்பிறகு எலும்பிச்சம் பழ சாரு ஊற்றி மீண்டும் கிளறி விடவும். பிறகு கொஞ்சம்கருவேப்பிலை மற்றும் கொஞ்சம் மல்லி கொத்து போட்டு இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|