LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-10

 

4.010.திருக்கெடிலவாணர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
94 94முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 4.010.1
மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய், இனிய வீணையை ஒலிப்பவராய், மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய், அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.
95 ஏறின ரேறினை யேழை தன்னொரு
கூறினர் கூறினர் வேத மங்கமும்
ஆறின ராறிடு சடையர் பக்கமும்
கீறின வுடையினர் கெடில வாணரே. 4.010.2
கெடிலவாணர் காளைவாகனம் உடையவர். பார்வதி பாகர். நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர். கங்கை தங்கும் சடையினர். பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர்.
96 விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 4.010.3
முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி, அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர், விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர். வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர்.
97 விழுமணி யயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்
கெழுமணி யரவினர் கெடில வாணரே. 4.010.4
கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை, நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார். அவர் நீலகண்டர். நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர்.
98 குழுவினர் தொழுதெழு மடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே. 4.010.5
கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர். பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர். மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர். பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர்.
99 அங்கையி லனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 4.010.6
தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி, கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர். பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர்.
100 கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததே னுகர்தருங் கெடில வாணரே. 4.010.7
தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர்.
101 கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே. 4.010.8
பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட, கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த, இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர்.
102 வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவும்
கிறிபட வுழிதர்வர் கெடில வாணரே. 4.010.9
கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து, புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து, சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர்.
103 பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 4.010.10
பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருந்திய திருவடியை உடையவர்.
திருச்சிற்றம்பலம்

4.010.திருக்கெடிலவாணர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 




94 94முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 4.010.1
மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய், இனிய வீணையை ஒலிப்பவராய், மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய், அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.

95 ஏறின ரேறினை யேழை தன்னொருகூறினர் கூறினர் வேத மங்கமும்ஆறின ராறிடு சடையர் பக்கமும்கீறின வுடையினர் கெடில வாணரே. 4.010.2
கெடிலவாணர் காளைவாகனம் உடையவர். பார்வதி பாகர். நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர். கங்கை தங்கும் சடையினர். பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர்.

96 விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீறுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 4.010.3
முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி, அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர், விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர். வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர்.

97 விழுமணி யயிலெயிற் றம்பு வெய்யதோர்கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்கெழுமணி யரவினர் கெடில வாணரே. 4.010.4
கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை, நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார். அவர் நீலகண்டர். நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர்.

98 குழுவினர் தொழுதெழு மடியர் மேல்வினைதழுவின கழுவுவர் பவள மேனியர்மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்கெழுவின யோகினர் கெடில வாணரே. 4.010.5
கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர். பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர். மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர். பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர்.

99 அங்கையி லனலெரி யேந்தி யாறெனும்மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரைநங்கையைப் பாகமும் நயப்பர் தென்றிசைக்கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 4.010.6
தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி, கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர். பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர்.

100 கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்கிழிந்ததே னுகர்தருங் கெடில வாணரே. 4.010.7
தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர்.

101 கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவேகிடந்துதா னகுதலைக் கெடில வாணரே. 4.010.8
பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட, கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த, இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர்.

102 வெறியுறு விரிசடை புரள வீசியோர்பொறியுறு புலியுரி யரைய தாகவும்நெறியுறு குழலுமை பாக மாகவும்கிறிபட வுழிதர்வர் கெடில வாணரே. 4.010.9
கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து, புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து, சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர்.

103 பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 4.010.10
பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருந்திய திருவடியை உடையவர்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 25 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.