மனிதர்கள் வசிப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ள ஐந்து கிரகங்களை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளியில் உள்ள பலவேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசா விண்வெளியில் "ஹப்பிள்' என்ற தொலைநோக்கியை நிலை நிறுத்தியுள்ளது. இதன் பலனாக, சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள, ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்த பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த கிரகங்களில், தண்ணீர் இருப்பது, உறுதியாகி உள்ளது. ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு அளவில் தண்ணீர் உள்ளது.
|