LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்வ தற்காக இந்தியாவிலிருந்து "சந்திரயான் 1" செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிய தகவல்கள் மூலமாக அங்கு தண்ணீர் இருப்பது தெரியவந்தது.
சந்திரனின் மேற்பரப்பு முழுவதும் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என இந்திய விண்வெளி ஆராய்ச்சிமைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். "சந்திரயான் 1" செய்கைக்கோளில் அமெரிக்காவின் "நாசா" சார்பில் "சந்திர யான் கனிமவள கண்டுபிடிப்பான்" கருவி ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கருவி அனுப்பிய கதிர்வீச்சின் எதிரொலி மூலமாக, "சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் (ஹைட்றஜன் மற்றும் ஒக்சிஜன் மூலக்கூறுகள்) உள்ளமை" தெரியவந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சந்திரனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து "லெக்ராஸ்" என்ற செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் இணைக்கப்பட்டிருந்த "சென்டவுர்" என்ற ரொக்கெட்டை சந்திரனின் தென் துருவத்தில் மோதச்செய்தனர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி இது நடந்தது. அப்போது, சந்திரனின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீற்றர் ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது.
அந்தப் பள்ளத்தில் இருந்து ஏராளமான பனிக்கட்டிகள் சிதறி வெளியேறின. அவற்றின் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்கும். அவற்றை அமெரிக்க விஞ்ஞா னிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந் திரனின் மேற்பரப்பில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ரூபா ஆயிரத்து 185 கோடி செலவிடப்பட்டுள்ளது.
"லெக்ராஸ்" திட்டத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான அந்தோனி கோல பிரட்டி கலிபோர்னியாவில் சனிக்கிழமை இது தொடர்பாகப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு:
"சந்திரனின் மேற்பரப்பு வறட்சியா னது என்றும் அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை என்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதுவும் சிறிதளவு அல்ல. மிகப் பெரிய அளவில் அங்கு தண்ணீர் இருக்கிறது.
"ரொக்கெட் மோதியதால் ஏற்பட்ட 20 முதல் 30 மீற்றர் ஆழப்பள்ளத்திலிருந்து தண்ணீர் கிடைத்துள்ளது. இது ஆரம்ப கட்டப் பரிசோதனையின் முடிவாகும். சந்திரனின் தென் துருவத்தின் அருகே நிரந்தரமாகவே ஒரு கற்றையான அடையாளம் தெரிகிறது. அது தண்ணீராகத்தான் இருக்கும்.
"ரொக்கெட் மோதிய இடத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளிபடவில்லை. சந்திரனில் தண்ணீர் இருப்பது, மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.'' இவ்வாறு விஞ்ஞானி அந்தோனி தெரிவித்துள்ளார்.

     சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்வ தற்காக இந்தியாவிலிருந்து "சந்திரயான் 1" செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிய தகவல்கள் மூலமாக அங்கு தண்ணீர் இருப்பது தெரியவந்தது.சந்திரனின் மேற்பரப்பு முழுவதும் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என இந்திய விண்வெளி ஆராய்ச்சிமைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். "சந்திரயான் 1" செய்கைக்கோளில் அமெரிக்காவின் "நாசா" சார்பில் "சந்திர யான் கனிமவள கண்டுபிடிப்பான்" கருவி ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கருவி அனுப்பிய கதிர்வீச்சின் எதிரொலி மூலமாக, "சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் (ஹைட்றஜன் மற்றும் ஒக்சிஜன் மூலக்கூறுகள்) உள்ளமை" தெரியவந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில், சந்திரனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து "லெக்ராஸ்" என்ற செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது.

 

     அதில் இணைக்கப்பட்டிருந்த "சென்டவுர்" என்ற ரொக்கெட்டை சந்திரனின் தென் துருவத்தில் மோதச்செய்தனர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி இது நடந்தது. அப்போது, சந்திரனின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீற்றர் ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது.அந்தப் பள்ளத்தில் இருந்து ஏராளமான பனிக்கட்டிகள் சிதறி வெளியேறின. அவற்றின் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்கும். அவற்றை அமெரிக்க விஞ்ஞா னிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந் திரனின் மேற்பரப்பில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ரூபா ஆயிரத்து 185 கோடி செலவிடப்பட்டுள்ளது."லெக்ராஸ்" திட்டத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான அந்தோனி கோல பிரட்டி கலிபோர்னியாவில் சனிக்கிழமை இது தொடர்பாகப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு:"சந்திரனின் மேற்பரப்பு வறட்சியா னது என்றும் அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை என்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதுவும் சிறிதளவு அல்ல. மிகப் பெரிய அளவில் அங்கு தண்ணீர் இருக்கிறது."ரொக்கெட் மோதியதால் ஏற்பட்ட 20 முதல் 30 மீற்றர் ஆழப்பள்ளத்திலிருந்து தண்ணீர் கிடைத்துள்ளது.

 

     இது ஆரம்ப கட்டப் பரிசோதனையின் முடிவாகும். சந்திரனின் தென் துருவத்தின் அருகே நிரந்தரமாகவே ஒரு கற்றையான அடையாளம் தெரிகிறது. அது தண்ணீராகத்தான் இருக்கும்."ரொக்கெட் மோதிய இடத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளிபடவில்லை. சந்திரனில் தண்ணீர் இருப்பது, மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.'' இவ்வாறு விஞ்ஞானி அந்தோனி தெரிவித்துள்ளார்.

 

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.