அடுத்த மாதம், நிலவுக்கு ரோபோடிக் கார் ஒன்றை, நாசா அனுப்ப உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராச்சி அமைப்பான நாசா, விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோளை , பல்வேறு கிரகங்களுக்கு அனுப்பி, வான்வெளியை ஆராந்து வருகிறது. இந்த வகையில், தற்போது, சிறிய கார் வடிவில் ரோபாட் வாகனத்தை, நிலாவுக்கு அனுப்புவதற்கான, இறுதிக்கட்ட பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரோபாட் வாகனம் அடுத்த மாதம், ஆறாம் தேதி, வெர்ஜீனியாவின் கடற்கரைப் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அமெரிக்க விமானப் படையின், மினோட்டர் வி ராக்கெட்' மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. இது பற்றி, நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், வானில் மிதக்கும் தூசி, துகள்கள் மத்தியில், மிதக்கும் நிலவு குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்வதன் மூலம், சூரிய குடும்பத்தில் உள்ள பிற கிரகங்களை அறிய உதவியாக இருக்கும். இந்த ரோபாட் கார் மூலம், நிலவின் அரிய படங்களைப் பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
|