LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தேசீய கீதங்கள் - பாரத நாடு பகுதி - 2

 

8. பாரத மாதா
தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்   1
இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்?-எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்.   2
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே-மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை.   3
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்   4
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளை யாடி-நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.   5
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்?-எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.   6
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர்கொடைக் கை?-சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.   7
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்?-பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்.   8
தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்
தையலர் தம் முறவும்-இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம்அனை செய்த உள்ளம்.   9
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே-இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி   10
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி-தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி.   11
தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை?-அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை.   12
9. எங்கள் தாய் (காவடிச் சிந்தில்ஆறுமுக வடிவேலனே என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.   1
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய்.   2
 
முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.   3
நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள்-தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடை யாள்.   4
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய்-தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.   5
பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.   6
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்   7
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள்-உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள்.   8
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.   9
வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய்-அவள்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள் தாய்.
10. வெறிகொண்ட தாய்
ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்
1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்
பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)
2. இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
3. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
4. வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)
5. பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)
11. பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
1. பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!
2. புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே!
3. பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
4. நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
5. மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
12. பாரத மாதா நவரத்தின மாலை
(ஒன்பது ரத்தினங்களின் பெயர்கள் மறைபொருளாகவோ, நேரிடையாகவோ இப்பாடலுள் வழங்கப்படுகின்றன.)
காப்பு
வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார்
நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்
சிவரத்ன மைந்தன் திறம்.
வெண்பா
திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை அறிவு-பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார்இந்தியா என்றநின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்.  1
கட்டளைக் கலித்துறை
காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
கும்பிட்டுக் கம்பனமுற்
றோலமிட் டோடி மறைந்தொழி
வான்;பகை யொன்றுளதோ?
நீலக் கடலொத்த கோலத்தி
னாள்மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கோர் பாலமிட்
டாள் அன்னை காற்படினே.   2
எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள்,இதிஹா ஸங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.  3
ஆசிரியப்பா
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்,
குற்றமே தமதுமகுடமாக் கொண்டோர்,  
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் மறையென்று எண்ணுவார்;
பற்றை யரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள்;உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்!புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே இருவாம் மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தியென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்,
பாரத மக்கள், இதனால் படைஞர்தம்
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.
(வெற்றி கூறுமின்: வெண்சங் கூதுமின்!)
தரவு கொச்சகக் கலிப்பா
5. ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்!ஓங்குமினோ!ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்;
வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே.
வஞ்சி விருத்தம்
6. திண்ணங் காணீர்!பச்சை
வண்ணன் பாதத் தாணை;
எண்ணம் கெடுதல் வேண்டா!
திண்ணம், விடுதலை திண்ணம்.
கலிப்பா
7. விடுத லைபெறு வீர்விரை வாநீர்
வெற்றி கொள்ளுவீர் என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்;
சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;
எடுமி னோஅறப் போரினை என்றான்
எங்கோ மேதக மேந்திய காந்தி!
அறுசீர் விருத்தம்
8. காந்திசேர் பதும ராகக் கடிமலர் வாழ்ஸ்ரீ தேவி
போந்துநிற் கின்றாள்இன்று பாரதப் பொன்னாடெங்கும்;
மாந்த ரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்த விட்டார்
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே.
எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
9. கணமெனு மென்றன் கண்முனே வருவாய்,
பாரத தேவியே, கனல்கால்
இணைவிழி வால வாய மாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே;
துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.
13. பாரத தேவியின் திருத்தசாங்கம்
நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.   1
நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்!தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய்! வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.   2
நகர் (மணியரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்னையுற வாழும் நகரெ துகொல்?-சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.   3
ஆறு (சுருட்டி)
வன்னக் கிளி!வந்தே மாதரமென் றே துவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.  4
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்!-ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.  5 
மலை (கானடா)
சீருஞ் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சுகம்
அரிமிசையே ஊர்வாள் அவள்.   6
ஊர்தி (தன்யாசி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்?-பொரு(பவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.  7
படை (முகாரி)
ஆசை மரகதமே!அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்!-பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.   8
தார் (பிலக்ரி)
வாராய் இளஞ்சுகமே!வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்!-சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.   9
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்ககிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடி தான் மற்றென்?-அடிப்(பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.   10
14. தாயின் மணிக்கொடி
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
2. பட்டுத் துகிலென லாமோ?-அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
4. கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)
5. அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
6. செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
7. கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)
8. பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
9. பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். (தாயின்)
10. சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
நொண்டிச் சிந்து
1. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)
2. மந்திர வாதி என்பார்-சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங் கள்-இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசிய லை-இவர்
அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் (நெஞ்சு)
3. சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;
எப்போதும் கைகட்டு வார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார் (நெஞ்சு)
4. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார். (நெஞ்சு)
5. சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார். (நெஞ்சு)
6. நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே
துஞ்சி மடிக்கின் றாரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே (நெஞ்சு)
7. எண்ணிலா நோயுடை யார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;
நண்ணிய பெருங்கலை கள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார் (நெஞ்சு)
16.போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)
1. வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனினாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ
2. இன்று பார தத்திடை நாய்போலே
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யா கச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ
3. வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய் போ போ போ
4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத் தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல்ந டையினாய் வா வா வா
6. மெய்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த்
தேச மீது தோன்றுவாய் வா வா வா
7. இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
களைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா
8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா

8. பாரத மாதா
தான தனந்தன தான தனந்தனதானனத் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழியமுடித்தவில் யாருடை வில்?-எங்கள்அன்னை பயங்கரி பாரத தேவிநல்ஆரிய ராணியின் வில்   1
இந்திர சித்தன் இரண்டு துண்டாகஎடுத்தவில் யாருடை வில்?-எங்கள்மந்திரத் தெய்வதம் பாரத ராணிவயிரவி தன்னுடை வில்.   2
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்உலகின்பக் கேணி என்றே-மிகநன்று பல்வேதம் வரைந்தகை பாரதநாயகி தன்திருக் கை.   3
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்ஆரிய ராணியின் சொல்   4
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்தட்டி விளை யாடி-நன்றுஉகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணிஒளியுறப் பெற்ற பிள்ளை.   5
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றதுகல்லொத்த தோள்எவர் தோள்?-எம்மைஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்ஆரிய தேவியின் தோள்.   6
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்தந்த தெவர்கொடைக் கை?-சுவைப்பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்பாரத ராணியின் கை.   7
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதைபுகன்ற தெவருடை வாய்?-பகைதீர்க்கத் திறந்தரு பேரினள் பாரததேவி மலர்த்திரு வாய்.   8
தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்தையலர் தம் முறவும்-இனிஇந்த உலகில் விரும்புகி லேன் என்றதுஎம்அனை செய்த உள்ளம்.   9
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்அன்பினிற் போகும் என்றே-இங்குமுன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்மொழிஎங்கள் அன்னை மொழி   10
மிதிலை எரிந்திட வேதப் பொருளைவினவும் சனகன் மதி-தன்மதியினிற் கொண்டதை நின்று முடிப்பதுவல்லநம் அன்னை மதி.   11
தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்செய்த தெவர் கவிதை?-அயன்செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரததேவி அருட் கவிதை.   12
9. எங்கள் தாய் (காவடிச் சிந்தில்ஆறுமுக வடிவேலனே என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடுசூழ்கலை வாணர்களும்-இவள்என்று பிறந்தவள் என்றுண ராதஇயல்பின ளாம்எங்கள் தாய்.   1
யாரும் வகுத்தற் கரிய பிராயத்தளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்பயின்றிடு வாள் எங்கள் தாய்.   2 முப்பது கோடி முகமுடை யாள்உயிர்மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்சிந்தனை ஒன்றுடையாள்.   3
நாவினில் வேத முடையவள் கையில்நலந்திகழ் வாளுடை யாள்-தனைமேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரைவீட்டிடு தோளுடை யாள்.   4
அறுபது கோடி தடக்கைக ளாலும்அறங்கள் நடத்துவள் தாய்-தனைச்செறுவது நாடி வருபவ ரைத்துகள்செய்து கிடத்துவள் தாய்.   5
பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில்தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்துர்க்கை யனையவள் தாய்.   6
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்ஒருவனை யுந்தொழு வாள்   7
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்ஒன்றென நன்றறி வாள்-உயர்போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்பொற்குவை தானுடை யாள்.   8
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்திநயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்ஆனந்தக் கூத்திடு வாள்.   9
வெண்மை வளரிம யாசலன் தந்தவிறன்மக ளாம்எங்கள் தாய்-அவள்திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்சீருறு வாள் எங்கள் தாய்.
10. வெறிகொண்ட தாய்
ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்
1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்பித்துடை யாள்எங்கள் அன்னைகாயழல் ஏந்திய பித்தன்-தனைக்காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)
2. இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்துஎற்றும் அலைத்திரள் வெள்ளம்தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
3. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்தெய்விக நன்மணம் வீசும்தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
4. வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மைவேல்கையிற் பற்றிக் குதிப்பாள்ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)
5. பாரதப் போரெனில் எளிதோ?-விறற்பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்மாரதர் கோடிவந் தாலும்-கணம்மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)
11. பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
1. பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,புன்மை யிருட்கணம் போயின யாவும்;எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவிஎழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!
2. புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே!
3. பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;கருதிநின் சேவடி அணிவதற்கு என்றேகனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடிசொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
4. நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
5. மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறிவேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
12. பாரத மாதா நவரத்தின மாலை
(ஒன்பது ரத்தினங்களின் பெயர்கள் மறைபொருளாகவோ, நேரிடையாகவோ இப்பாடலுள் வழங்கப்படுகின்றன.)
காப்பு
வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்தபாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார்நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்சிவரத்ன மைந்தன் திறம்.
வெண்பா
திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனிஅறமிக்க சிந்தை அறிவு-பிறநலங்கள்எண்ணற் றனபெறுவார்இந்தியா என்றநின்றன்கண்ணொத்த பேருரைத்தக் கால்.  1
கட்டளைக் கலித்துறை
காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்கும்பிட்டுக் கம்பனமுற்றோலமிட் டோடி மறைந்தொழிவான்;பகை யொன்றுளதோ?நீலக் கடலொத்த கோலத்தினாள்மூன்று நேத்திரத்தாள்காலக் கடலுக்கோர் பாலமிட்டாள் அன்னை காற்படினே.   2
எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலேபன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்பரவுபுகழ்ப் புராணங்கள்,இதிஹா ஸங்கள்இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்றவிருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.  3
ஆசிரியப்பா
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!கற்றவ ராலே உலகுகாப் புற்றது;உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்,குற்றமே தமதுமகுடமாக் கொண்டோர்,  
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலேமுற்றிய அறிவின் மறையென்று எண்ணுவார்;பற்றை யரசர் பழிபடு படையுடன்சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்பாரத நாடு புதுநெறி பழக்கல்உற்றதிங் கிந்நாள்;உலகெலாம் புகழஇன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்!புவிமிசை யின்றுமனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,தர்மமே இருவாம் மோஹன தாஸகர்ம சந்திர காந்தியென் றுரைத்தான்.அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமேஅரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும்வெற்றி தருமென வேதம் சொன்னதைமுற்றும் பேண முற்பட்டு நின்றார்,பாரத மக்கள், இதனால் படைஞர்தம்
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாதகற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.(வெற்றி கூறுமின்: வெண்சங் கூதுமின்!)
தரவு கொச்சகக் கலிப்பா
5. ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்ஓதுமினோ வேதங்கள்!ஓங்குமினோ!ஓங்குமினோ!தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்;வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே.
வஞ்சி விருத்தம்
6. திண்ணங் காணீர்!பச்சைவண்ணன் பாதத் தாணை;எண்ணம் கெடுதல் வேண்டா!திண்ணம், விடுதலை திண்ணம்.
கலிப்பா
7. விடுத லைபெறு வீர்விரை வாநீர்வெற்றி கொள்ளுவீர் என்றுரைத் தெங்கும்கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்;சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை;சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;எடுமி னோஅறப் போரினை என்றான்எங்கோ மேதக மேந்திய காந்தி!
அறுசீர் விருத்தம்
8. காந்திசேர் பதும ராகக் கடிமலர் வாழ்ஸ்ரீ தேவிபோந்துநிற் கின்றாள்இன்று பாரதப் பொன்னாடெங்கும்;மாந்த ரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்த விட்டார்காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே.
எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
9. கணமெனு மென்றன் கண்முனே வருவாய்,பாரத தேவியே, கனல்கால்இணைவிழி வால வாய மாஞ் சிங்கமுதுகினில் ஏறிவீற் றிருந்தே;துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்துயர்கெட விடுதலை யருளிமணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.
13. பாரத தேவியின் திருத்தசாங்கம்
நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்தபாரதமா தேவியெனப் பாடு.   1
நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்!தேவியெனக் கானந்தமானாள்பொன் னாட்டை அறிவிப்பாய்! வானாடுபேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்ஆரியநா டென்றே அறி.   2
நகர் (மணியரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்நன்னையுற வாழும் நகரெ துகொல்?-சின்மயமேநானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுதுதானென்ற காசித் தலம்.   3
ஆறு (சுருட்டி)
வன்னக் கிளி!வந்தே மாதரமென் றே துவரைஇன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத்தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும்வான்போந்த கங்கையென வாழ்த்து.  4
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்வாலை வளரும் மலைகூறாய்!-ஞாலத்துள்வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.  5 
மலை (கானடா)
சீருஞ் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின்பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சுகம்அரிமிசையே ஊர்வாள் அவள்.   6
ஊர்தி (தன்யாசி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்?-பொரு(பவர்மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்திண்ணமுறு வான்குலிசம் தேறு.  7
படை (முகாரி)
ஆசை மரகதமே!அன்னை திரு முன்றிலிடைஓசை வளர்முரசம் ஓதுவாய்!-பேசுகவோசத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்முத்திதரும் வேத முரசு.   8
தார் (பிலக்ரி)
வாராய் இளஞ்சுகமே!வந்திப்பார்க் கென்றுமிடர்தாராள் புனையுமணித் தார்கூறாய்!-சேராரைமுற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்பொற்றா மரைத்தார் புனைந்து.   9
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்ககிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்மடிப்பவளின் வெல்கொடி தான் மற்றென்?-அடிப்(பணிவார்நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளிகுன்றா வயிரக் கொடி.   10
14. தாயின் மணிக்கொடி
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றேபாங்கின் எழுதித் திகழும்-செய்யபட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
2. பட்டுத் துகிலென லாமோ?-அதில்பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்றுமட்டு மிகந்தடித் தாலும்-அதைமதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
4. கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)
5. அணியணி யாயவர் நிற்கும்-இந்தஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?பணிகள் பொருந்திய மார்பும்-விறல்பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
6. செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
7. கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)
8. பூதலம் முற்றிடும் வரையும்-அறப்போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
9. பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். (தாயின்)
10. சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
நொண்டிச் சிந்து
1. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே;வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்தமரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)
2. மந்திர வாதி என்பார்-சொன்னமாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;யந்திர சூனியங் கள்-இன்னும்எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!தந்த பொருளைக் கொண்டே-ஜனம்தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;அந்த அரசிய லை-இவர்அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் (நெஞ்சு)
3. சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகுதூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;அப்பால் எவனோ செல்வான்-அவன்ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;எப்போதும் கைகட்டு வார்-இவர்யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார் (நெஞ்சு)
4. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒருகோடிஎன் றால் அது பெரிதா மோ?ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்நெஞ்சு பிரிந்திடு வார்-பின்புநெடுநாள் இருவரும் பகைத்திருப் பார். (நெஞ்சு)
5. சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியேகோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒருகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார். (நெஞ்சு)
6. நெஞ்சு பொறுக்கு திலையே-இதைநினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையேகஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்பரிதவித் தேஉயிர் துடிதுடித் தேதுஞ்சி மடிக்கின் றாரே-இவர்துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே (நெஞ்சு)
7. எண்ணிலா நோயுடை யார்-இவர்எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;நண்ணிய பெருங்கலை கள்-பத்துநாலாயிரங் கோடி நயந்துநின் றபுண்ணிய நாட்டினி லே-இவர்பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார் (நெஞ்சு)
16.போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)
1. வலிமையற்ற தோளினாய் போ போ போமார்பி லேஓ டுங்கினாய் போ போ போபொலிவி லாமு கத்தினாய் போ போ போபொறி யிழந்த விழியினாய் போ போ போஒலியி ழந்த குரலினாய் போ போ போஒளியி ழந்த மேனினாய் போ போ போகிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போகீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ
2. இன்று பார தத்திடை நாய்போலேஏற்ற மின்றி வாழுவாய் போ போ போநன்று கூறி லஞ்சுவாய் போ போ போநாணி லாது கெஞ்சுவாய் போ போ போசென்று போன பொய்யெலாம் மெய்யா கச்சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போவென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாகவிழிம யங்கி நோக்குவாய் போ போ போ
3. வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போநூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும்நூலி லொத்தி யல்கிலாய் போ போ போமாறு பட்ட வாதமே ஐந்நூறுவாயில் நீள ஓதுவாய் போ போ போசேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர்சிறியவீடு கட்டுவாய் போ போ போ
4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போதரும மொன்றி யற்றிலாய் போ போ போநீதி நூறு சொல்லுவாய் காசொன்றுநீட்டி னால்வ ணங்குவாய் போ போ போதீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னேதீமை நிற்கி லோடுவாய் போ போ போசோதி மிக்க மணியிலே காலத் தால்சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வாஉறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வாகளிப டைத்த மொழியினாய் வா வா வாகடுமை கொண்ட தோளினாய் வா வா வாதெளிவு பெற்ற மதியினாய் வா வா வாசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வாஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வாஏறு போல்ந டையினாய் வா வா வா
6. மெய்மை கொண்ட நூலையே அன்போடுவேத மென்று போற்றுவாய் வா வா வாபொய்மை கூற லஞ்சுவாய் வா வா வாபொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வாநொய்மை யற்ற சிந்தையாய் வா வா வாநோய்க ளற்ற உடலினாய் வா வா வாதெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த்தேச மீது தோன்றுவாய் வா வா வா
7. இளைய பார தத்தினாய் வா வா வாஎதிரி லாவ லத்தினாய் வா வா வாஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்உதய ஞாயி றொப்பவே வா வா வாகளையி ழந்த நாட்டிலே முன்போலேகளைசி றக்க வந்தனை வா வா வாவிளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல்விழியி னால்வி ளக்குவாய் வா வா வா
8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வாவிநயம் நின்ற நாவினாய் வா வா வாமுற்றி நின்ற வடிவினாய் வா வா வாமுழுமை சேர்மு கத்தினாய் வா வா வாகற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வாகருதிய தியற் றுவாய் வா வா வாஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம்ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.