|
||||||||
நாட்டுக்காய் சாதம் |
||||||||
தேவையானவை : 1. சதுரம் சதுரமாக வெட்டிய கத்திரிக்காய் - 2 2. அவரைக்காய் - 50 கிராம்
3. சிறிய சதுரமாக வெட்டிய சேனை - 50 கிராம் 4. ஒரு இன்ச் அளவு நறுக்கிய பீன்ஸ் - 50 கிராம் 5. மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன் 6. மிளகுப்பொடி - ஒரு டீஸ்பூன் 7. பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் 8. பெருங்காயம் - ஒரு சிட்டிகை 9. நல்லஎண்ணெய் - 3 டீஸ்பூன் 10. சுக்குப்பவுடர் - 1/2 டீஸ்பூன் 11. வறுத்துப் பொடித்த உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 12. கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு 13. சாதம் - 3 கப் செய்முறை : 1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
2. பின் இஞ்சியை வதக்கி காய் சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி தேவையான உப்பு போடவும்.
3. சிறிது தண்ணீர் விட்டு காய்களை வேகவிடவும். தண்ணீர் வற்றியதும், சாதம், சுக்குப்பவுடர், உளுந்தம் பருப்பு பொடி சேர்த்துக் கிளறவும் மசாலா பச்சை வாசனை போன பின் இறக்கி ஊறுகாயுடன் பரிமாறவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: Vegetable Rice Naattu Kaai Rice நாட்டுக்காய் சாதம் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|