ரசாயனம் எதையும் நாடாமல், பஞ்சகாவியம், மீன் அமிலம், பூச்சி விரட்டி, ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கையான வழிகளில் இரண்டு ஏக்கரில் எள் அறுவடை செய்துள்ளார் மயிலாடுதுறையை (மாயூரம்) சேர்ந்த N . Venkatesh .
விவசாயத்தின் மீதும் மற்றும் நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் இரண்டு ஏக்கரில் எள்ளும் மற்றும் இரண்டு ஏக்கரில் உள்ளுந்தும் விதைத்து இருந்தார். வேலை ஆட்களின் தவறுகளால் உளுந்து இவருக்கு கை கொடுக்கவில்லை. எள்ளு இவருக்கு சிறிதளவு கை கொடுத்தது.
பலர் இவரை ரசாயனம் உரம் பயன்படுத்த சொல்லி அறிவுரை கூறினார்கள். ஆனால் இவரோ சரியான தருணங்களில் பஞ்சகாவியம், மீன் அமிலம், பூச்சி விரட்டி ஆகிவற்றை பயன்படுத்தி எள் அறுவடை செய்து உள்ளார். கிடைத்த எள்ளை கொண்டு நல்லெண்ணெய் ஆகா விற்க விரும்புகிறார் . இயற்கை வழியில் நல்லெண்ணெய் விரும்புவோர் இவரை தொடர்பு கொள்ளலாம் .
தொலைபேசி என் : 94436 34287.
|