|
||||||||
நவதானிய சுண்டல்(navadhanya sundal) |
||||||||
தேவையானவை: அரிசி பொரி - அரை கப் கோதுமை மாவு - ஒரு ஸ்பூன் பச்சைப் பயறு - நாலு டீஸ்பூன் துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை - அரை கப் எள்- நாலு டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 உப்பு - தேவைக்கேற்ப தேங்காய் துருவல் - ஒரு கப் கடுகு-சிறிது, உளுத்தம் பருப்பு-சிறிது, கருவேப்பிலை-சிறிது, கொத்தமல்லி - கடைசியில் தூவ செய்முறை: 1.முதலில் எள், உப்பு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்து தனியாக வைத்து கொள்ளவும். 2.துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை எல்லாவற்றையும் தனித் தனியாக ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். 3.கோதுமை மாவை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து குட்டிக் குட்டிப் பூரிகளாக செய்து கொள்ளவும் 4.பின்பு பூரிகளை கையால் உதிர்த்துக் கொள்ளவும். 5.கடாயில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து, பின் பொரி / பூரி தவிர எல்லாவற்றையும்வதக்கவும். 6.ஏற்கனவே பொடித்து வைத்த பொடியை சேர்த்துகிளறவும். 7.பரிமாறும் முன், பொரி மற்றும் பூரியை தூவி, கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|