இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன்
கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சு குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும்
இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.கோயிலின் தல விருட்சம் ஆலமரம்.
ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மனின் வலது புறம் ஓங்கிய கையுடனும். இடது கையில் குழந்தையுடனும் காலில்
அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.ஆறடி உயரமுள்ள இந்த அம்மனை தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல்
தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.
இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சு குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
கோயிலின் தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மனின் வலது புறம் ஓங்கிய கையுடனும். இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.ஆறடி உயரமுள்ள இந்த அம்மனை தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும். |