LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

நவமணிமாலை

17.1:
ஒருமதியன்பருளங்க வர்ந்தன
வுலகமடங்க வளர்ந்தளந்தன
வொருசடையொன்றியகங்கைதந்தன
வுரகபடங்களரங்குகொண்டன
தருமமுயர்ந்ததிதென்னநின்றன
தருமனிரந்த திசைந்து சென்றன
சகடமுடைந்து கலங்க வென்றன
தமர்க ளுருந்து மருந்தி தென்பன
திருமகள் செய்ய கரங்களொன்றின
திகழ்து ளவுந்து மனங்க மழ்ந்தன
செழுமணி கொண்ட சிலம்பிலங்கின
சிலைதனிலன் றோரணங்கு மிழ்ந்தன
வருமறையந்த மமர்ந்த பண்பின
வயன்முடி தன்னிலமர்ந்து யர்ந்தன
வருள்தர வெண்ணிய யிந்தைவந்தன
வடியவர் மெய்யர் மலர்ப்பதங்களே.

17.2:
மகரம்வளரு மளவில்பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவுக மடமென வமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியுமசுரனு மைடந்து வசுதையைப்பெ யர்த்தனை
வலிகொளவுணனுடல் பிளந்து மதலை மெய்க்கு தித்தனை
பகருமுலக மடியளந்து தமர்மளுக் களித்தனை
பரசுமுனிவன் வடிவுகொண்டு பகைவரைத் துணித்தனை
பணியவிசைவில் றசமுகன்றன் முடுகள் பத்துதிர்த்தனை
படியுமுருவில் வருபிலம்ப வசுரனைத் தகர்த்தனை
நகரிதுவரையென வுகந்துவரை கரத்தெடுத்தனை
நடமொடிய லுபரியில் வந்துநலிவ றுக்கவுற்றனை
நலியுன் வினைகள் செகுமருந்தின் நலமுறைந்த வெற்பினை
நணுகு கருடநதி கிளர்ந்த புனலுகப் பில்வைத்தனை
யகரமுதலவுரை கொள்மங்கை கணவனுக்களித்தனை
யடையும் வினதை சிறுவனுய்ய வருள்கொடுத்து யர்த்தினை
யடியு மணையு மெனு மனந்தனடி தொழக்க ளித்தனை
யவனிமருவு திருவயிந்தை யடியவர்க்கு மெய்யனே.

17.3:
புரமுயர்த்த வசுரர்கட்கு ஓர்புறமுரைத்த பொய்யினான்
வரையெடுத்து மழைதடுத்த மழையொடொத்த மெய்யினான்
றிரைநிரைத்த கடலெரித்த சிலைவளைத்த கையினான்
அருள்கொடுத்து வினைதவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே.

17.4:
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகனார்
வாசக்குழல் மாமலராள் மணவாளர்
வாசித்தெழுமன்மதனார் மணற்றோப்பின்
மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவாரே.

17.5: உருளுஞ்சகடமொன்றுதைத்தாய்
உலகமேழு முண்டுமிழ்ந்த ளந்தாய்
பொருளுமழலு மிறையாகப்
பூண்டேன் அடிமையினின் மீண்டேன்
இருளும் மருளுன் தருமந்நாள்
எழிலாராழிசங்கேந்தி
யருளுந்தெருளுன் தரவென்பா
லடியோர் மெய்ய வந்தருளே.

17.6:
வஞ்சனை செய்த பூதனையை மலியுஞ்சாட்டை
மல்லரையோர் மதகளிற்றை வானோரஞ்சுங்
கஞ்சனை முன்கடிந்தவனி பாரந்தீர்ந்த
காவலனே கோவலனாய் நின்றகோவே
யஞ்சன முங்காயா வுமனையமேனி
யடியவர்க்கு மெய்யனே அயிந்தைவாழு
மஞ்செனவே யருள்பொழியும் வள்ளலே நின்
வடிவழகு மறவாதார் பிறவாதாரே.

17.7:
மையுமாகட லுமயிலுமா மழையு
மணிகளுங்கு வளையுங்கொண்ட
மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோ
ரீசனே நீசனேனடைந்தேன்
கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே
காலனார் தமரெனைக் கவராது
இயனே வந்தன் றஞ்சலென் றருடென்
னயிந்தைமா நகர மர்ந்தானே.

17.8:
மஞ்சுலாவு சோலை சூழ யிந்தை மன்னுசீர்
வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே
செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வம் தெய்வ நாயக
வெஞ்சொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்குமுன்ன நீ
யஞ்ச லஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டுமச்சுதா
யடியவர்க்கு மருளியக்கு மடியவர்க்கு மெய்யனே.

17.9:
பொருத்தம் பொருந்தலும் போகுந்தவற்றுடன் பொய்ம்மதிமேல்
விருத்தங்கலிதுறை மேவுமழன்மதம் வேறினியென்
றிருத்தமனத்தினிற் சேராவெமைத் தெய்வநாயகநின்
வருத்தம் பொறாவருளால் மன்னடைக் கலங்கொண்டருளே.

17.10:
அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத
னடியிணைமேல் அடியுரையாலைம்பதேத்திச்
சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழலம்மானை யூசலேசல்
பரவு நவமணி மாலையிவையுஞ்சொன்னேன்
முந்தைமறை மொழிய வழிமொழி நீயென்று
முகுந்தனருள் தந்த பயன் பெற்றேன் நானே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : ஒருமதி, மகரம், புரமுயர்ந்த,
தேசொத்தார், உருளம், வஞ்சனை மலியும், மையும்,
மஞ்சு, பொருத்தம், அந்தமில்சீர்,

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.