நடிகை நயன்தாரா தற்போது ஆக்சன் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இதற்கு காரணம் சகநடிகையான அனுஷ்கா, தற்போது ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’, படத்தில் ராணி வேடத்தில் நடித்துவரும் அனுஷ்கா இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் எடுத்து ஆக்ஷனிலும் கலக்குகிறாராம். இதேபோல் ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறாராம் அனுஷ்கா. நயன்தாராவுக்கும் வழக்கமான காதல் படங்களில் நடித்து அலுத்துவிட்டதாம் அதனால், ஆக்சன் பக்கமும், சரித்திர கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் நயன்தாரா.
|