நயன்தாரா முன்பெல்லாம் தனது ஓய்வு நேரத்தை செல்போனில் படங்கள் பார்ப்பது, தோழிகளுக்கு தகவல்கள் அனுப்புவது போன்ற பழக்கங்களில் செலவழித்து வந்தார். தற்போது அவருக்கு ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க ஒரு புதிய பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜோதிகா.
அந்த புதிய பழக்கம் குறித்து நயன்தாரா கூறும்போது,
ஜோதிகா ஒரு தடவை எனக்கொரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகத்தை இரண்டு நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும் என்று கூறினார். நானும் அதை படித்தேன். ஆனால் இரு நாட்களில் முடிக்க முடியவில்லை. ஆனாலும் புத்தகம் படிப்பதால் மனம் இருக்கத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாய் மாறுவதை உணர்ந்தேன். ஜோதிகா அறிவுரைப்படி இப்போது நான் புத்தக பிரியை ஆகிவிட்டேன். பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். படப்பிடிப்பு ஒய்வில் அவற்றையில் படிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறுகிறார் நயன்....
|