ஈரோடு, பிரப் சாலை – பெரியமாரியம்மன் கோயில் அருகில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 17.11.2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது.
தொடக்க நிகழ்விற்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குனருமான த. ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றார்.
ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். சிவக்குமார் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இப்புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் குழந்தைகள் நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இண்டர்நெட், இலக்கியம், இலக்கணம், வரலாறு, திறனாய்வு, சமூக அறிவியல், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கால்நடை பராமரிப்பு, கைத்தொழில், வாழ்க்கை வரலாறு, சட்டம், வேளாண்மை, அகராதிகள், பொது அறிவு என பலதுறை சார்ந்த நூல்கள் ஏராளமான தலைப்புகளில் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சி தினசரி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் அ. கணேசன், கோவை மேலாளர் ஆர். ரங்கராஜன், ஈரோடு கிளை மேலாளர் சி. முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
|