LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !!

நடிகர் : ஆரி, 


நடிகை : ஷிவதா


இயக்கம் : கிருஷ்ணா


இசை : சத்யா 


டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் தனது மூன்று கூட்டாளிகளுடன் திருடி பிழைப்பை நடித்தி வருகிறார் நாயகன் ஆரி(தார்ப்பாய் முருகன்). அதே நெடுஞ்சாலையில் டெல்லி தாபா என்னும் ஓட்டல் நடத்தி வருகிறார் நாயகி ஷிவதா(மங்கா). 


ஒருநாள் நாயகி ஷிவதாவின் ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் ஆரி. நன்றாக சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தப்பிக்க முயற்சி செய்கிறார். இதனை கவனிக்கும் ஷிவதா ஆரியிடம் நைசாக பேசி அவரை வீட்டில் அடைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். 


போலீஸ் வந்து ஆரியை பார்க்கும் போது, தாங்கள் நீண்ட நாட்களாக தேடி வந்த நெடுஞ்சாலை திருடன் இவன் தான் என்று தெரிந்தவுடன் ஆரியை கைது செய்து அழைத்துச் செல்கிறனர். அங்கு புதிய போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரசாந்த் நாராயண் ஆரியை சரமாரியாக அடித்து துவைக்கிறார். 


அப்போது அங்கு வரும் திருட்டு பொருள் வாங்கும் சேட்டு பிரசாந்த்திடம் இனி நாங்கள் திருடுவதில் உங்களுக்கு பங்கு தருகிறோம் என்று கூறி ஆரியை வெளியே கொண்டு வருகிறார்.


இந்நிலையில், போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் ஷிவதாவை கண்டவுடன் பிரசாந்த் நாராயண் அவளை அடைய விரும்புகிறார்.  


இதற்கு ஷிவதா மீது ஆரிக்கு உள்ள கோபத்தை சாதகமாக பயன்படுத்தி, அவனை தூண்டி விட்டு ஷிவதாவின் தாபா கடையை அழிக்க சூழ்ச்சி செய்கிறார் வில்லன் பிரசாந்த். இதை தடுப்பது போல் தாபா கடையையே சுற்றி சுற்றி வருகிறார் பிரசாந்த் நாராயண். 


ஒரு நாள் ஷிவதாவிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் பிரசாந்த் நாராயணை ஷிவதா தாக்கிவிடுகிறார். இதனால் கோபம் அடைந்து ஷிவதா மீது விபச்சார வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார். 


கோர்ட்டில் ஆரியை சாட்சி சொல்ல வைக்கிறார் பிரசாந்த். ஆரியோ ஷிவதாவை நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். ஷிவதா தன் மானத்தை காப்பாற்றிய ஆரியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வெறுக்கும் ஆரி பிறகு ஷிவதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலித்த பின் ஆரி திருந்தி வாழ முயற்சி செய்கிறார். 


இதையறிந்த பிரசாந்த் ஆரியை தீர்த்து கட்டிவிட்டு ஷிவதாவை அடைய முடிவு செய்கிறார். இறுதியில் பிரசாந்திடம் இருந்து ஆரி தப்பித்தாரா? ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா? என்பதே மீதிக்கதை.


இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆரி ஏற்கனவே ரெட்டைசுழி படத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவரை நன்றாக நடிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக லாரிகளில் திருடும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், மோதல் காட்சிகளிலும் ரசிக்கக் வைத்திருக்கிறார். 


நாயகியாக வரும் ஷிவதாவோ படம் முழுக்க பாவாடை சட்டையிலே பவனி வருகிறார். நடிப்பில் ஓரளவுக்கு பரவாயில்லை.


படத்தின் காமெடிக்கு ஆதாரமே, சேட்டாக வரும் சலீம்குமார் தான். நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார். 


இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயண் படம் முழுக்க மிரட்டி இருக்கிறார்.  


சத்யாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை.  


மொத்தத்தில் "நெடுஞ்சாலை" பரவால....

by Swathi   on 29 Mar 2014  0 Comments
Tags: நெடுஞ்சாலை   Nedunchalai   Nedunchalai Review   Nedunchalai Movie Review   Nedunchalai thiraivimarsanam   Nedunchalai Online Review     
 தொடர்புடையவை-Related Articles
நெடுஞ்சாலை ஆரியின் அடுத்த படம் தரணி !! நெடுஞ்சாலை ஆரியின் அடுத்த படம் தரணி !!
நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !! நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.