LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பேஸ்புக் நட்பால் விழும் ஐந்து தொடர் கொலைகளின் கதைதான் நீ நான் நிழல்...!

இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது.


இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. 


மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது  ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.


அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பது மீதி.


இதுதான் நீ நான் நிழல் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லரின் கதை. இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் புரட்சித் திலகம் சரத்குமார், எம்எல்ஏ.


அவருடன் அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்எஸ் பாஸ்கர், தேவன், ப்ளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம்பெற்றுள்ளனர்.


படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜான் ராபின்சன். இவர் 12 ஆண்டுகள் கே எஸ் அதியமான், மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். 


படத்துக்கு நஸீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிகில் வேணு எடிட்டிங் செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.


பிறைசூடன், கண்மணி ராஜா முகமது பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் வசனங்களை கண்மணி ராஜா முகமதுவே எழுதியுள்ளார்.

Nee naan Nizhal Press Meet Photos
by Swathi   on 07 Oct 2014  0 Comments
Tags: நீ நான் நிழல்   பேஸ்புக் நட்பு   Nee Naan Nizhal   Facebook Friendship           
 தொடர்புடையவை-Related Articles
பேஸ்புக் நட்பால் விழும் ஐந்து தொடர் கொலைகளின் கதைதான் நீ நான் நிழல்...! பேஸ்புக் நட்பால் விழும் ஐந்து தொடர் கொலைகளின் கதைதான் நீ நான் நிழல்...!
விரைவில் வெளியாக இருக்கும் நீ நான் நிழல் !! விரைவில் வெளியாக இருக்கும் நீ நான் நிழல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.