|
|||||
பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்க அர்ப்பணித்து வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற்றார் நெல் ஜெயராமன்... |
|||||
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரப்பியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் பாரம்பர்ய நெல் திருவிழாவை நடத்தி வந்தவர். பலர் நெல் திருவிழாவை முன்னெடுத்ததற்கு காரணமாக இருந்தவர். சுமார் 174க்கும் மேலான பாரம்பரிய நெல் விதைகளை மீண்டும் உயிர் கொணர்ந்து சுமார் 34000-த்திற்கும் மேலான விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய பேருதவி செய்துள்ளார். பொருளாதார பின்புலம் இல்லாத சூழலில்,வணிக வாய்ப்பு நிறைய இருந்தும் அதனை மறுத்தவர். நம்மாழ்வார் வழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க போராடியவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலைத்தமிழ் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "உலக சித்தர் மரபுத் திருவிழாவில்" திரு. நெல் ஜெயராமன் அவர்கள் அனைத்து பாரம்பரிய நெல் வகைகளையும் வைத்து மக்களிடம் விளக்கினார். கோடிகளில் சிலரே குடும்பத்தை விட்டு தன்னை பொது வாழ்க்கைகாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பவர்கள். அந்த நிறைவான வாழ்வை , உலகம் போற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வை வாழ்ந்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் ஒன்று திரண்டு பசுமை முழக்கமிட்டு வழியனுப்பி வைத்த நிகழ்வு அவரின் பெயரை வரலாற்றில் என்றும் பதித்திருக்கும் என்பதற்கான அடையாளம். அன்னாரது ஆன்மா இறையருளில் இளைப்பாற பிரார்த்திப்போம். இவரது பாரம்பரிய நெல் மீட்டேடுப்பை இவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுப்பதே இவருக்கு செய்யும் நன்றிக்கடனாகும். திரு.நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்கள் சிலவற்றைக் காண |
|||||
poonkar | |||||
by Swathi on 07 Dec 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|