புதுச்சேரி பாகூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி 'நெல் கிருஷ்ணமூர்த்தி' அவர்கள் மாரடைப்பால் நேற்று காலமானார். பாரம்பர்ய நெல் ரகங்கள் மீது அதிக பற்று கொண்ட இவர், நம்மாழ்வாரை வழிகாட்டியாக பின்பற்றியவர்.பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து, அதன் மூலம் மகசூல் காட்டி விவசாயிகளிடையே நெல் ரகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த இவரின் இழப்பு ஈடில்லாத ஒன்று. வலைத்தமிழ்.காம் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
|