LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

நெல்சன் மண்டேலா

செயற்படுத்தி முடிக்கும்வரை சில விஷயங்கள் எப்போதும்

சாத்தியமற்ற தொன்றாகவே காட்சி தருவதுண்டு .


உலகிலேயே நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த தலைவர் நெல்சன் மண்டேலா ( Nelson Mandela ) ஆவார் . இவர் 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று குலு கிராமத்தில் பிறந்தார் . இவர் சிறுவயதில் குத்துச்சண்டை வீரராக இருந்தார் . சட்டக்கல்வி பயின்றார் . தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் . ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடினார் . வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறை , கைதுகள் , சித்திரவதைகள் ஆகியவற்றைக் கண்டு , ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர்முறையை கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து மேற்கொண்டார் .1961 ஆம் ஆண்டில் தேசத்தின் ஈட்டி என்ற பெயரில் கருப்பின மக்களின் கொரில்லாப் போர் தொடங்கியது . நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு , பின்னர் வாழ்நாள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது . இவர் ரோபன் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் .

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் . உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைப்பெற்றன . நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் .1993 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது . மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1999 க்குப் பின் அரசு பதவியிலிருந்து விலகினார் . அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . அத்துடன் 250 க்கும் மேற்பட்ட விருதுகளை உலகளவில் பெற்றுள்ளார் . இவர் 2013 இல் மறைந்தார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.