LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

நெஞ்சு விடு தூது

 

நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல எழுதப்பட்டது. 
நூல்
இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்
பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினா - னன்றியும்
இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு 
மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்
வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினா - னோத 
வரியா னெளியா நளவிறந்து நின்ற
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா 
வருவா னுருவா னருவுருவு மில்லான் 
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்
உயிரியல்பு
என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று
தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்
சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலா ரகந்தைக்கு - மேனி 
யயர வயர வழிய வழியும்
உயிரின் றுயர முரையேன் - வயிரமே
தளையினியல்பு
கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத 
வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா 
வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி 
வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது
தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு 
மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் 
பாவமெனும் பெளவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்
குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறும்
சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
இறைவனது நிலை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி 
யாதி யமல நிமலனருட் - போத
அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி 
லளியி லளியி லளிய னளியில்
அளவி லளவி லளவன் - அளவிறந்து
நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா 
விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் 
றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்
கல்லாது தோன்றா வமல னகிலமெலா
நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு 
மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
தசாங்கம்
1.மலை
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே
2.ஆறு
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்
களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்
கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய 
பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு 
மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ
மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்
காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப் 
புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி 
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன 
மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்
சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்
ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்
மீதான பத்து மிகப்பரந்து - காதிப்
பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய
வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா
நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த
தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு 
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு 
மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்
தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா
வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா
வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு 
மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்
3. நாடு
பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்
4. ஊர்
கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்
5. தார்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந் 
துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும் 
புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்
உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா 
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்
மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத
6. குதிரை
வானம் புவன மலைகடலேழ் பாதாள 
முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா
யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள்
நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்
7. யானை
பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு 
மாதார மாகி யகண்டநிறைந் - தோத
அரிதா யெளிதா யருமறையா றங்கத்
துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்
காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்
தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த 
மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா 
லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா
லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப் 
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான் 
மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்
8. கொடி
சமையங் கடந்து தனக்கொப் பிலாத 
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
9. முரசு
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே 
வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து 
வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே
என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே
நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்
10. ஆணை
மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை 
யுலகு முலகா லுணரவொண்ணா வூரு
மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த
இறைவன் பெருமை
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான 
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான் 
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் 
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி 
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா 
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்
ஞானாசாரியார்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்
போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ
நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்
வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா
நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்
குரூபதேசம்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே
னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்
நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய
தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை
நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை 
யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு
வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்
சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி
னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச 
மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்
கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத
வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள 
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா
மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க
ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்
பாடலா ராடலார் பண்பலார் நண்பலா 
ராடலா ராட லகன்பதியாங் - கூடலார்
காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா
நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே 
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன 
மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த
மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு
மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா 
னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்
அடையும் இடம்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே 
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி 
யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற
நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென் 
றிகலா விருளலகை போலிகலே பேசு 
முலகா யதன்பா லுறாதே - பலகாலுந்
தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே
நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்
தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு 
மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும் 
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா
வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே 
லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்
செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட 
வழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ 
னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்
வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி 
யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்ப 
மருவி மயங்கி வருவரோ - விருபொழுது
நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்
கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா
டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும் 
பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே 
யீங்கொன்றை வாரா யினி.
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.
நெஞ்சு விடு தூது முற்றும்.

நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல எழுதப்பட்டது. 
நூல்

இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்தநாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்துமென்று மறியா வியல்பினா - னன்றியும்இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்றபெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவானமெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்படநாகம் பூண்ட பரமன் பசுவின்இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்
உயிரியல்பு
என்றுமுள னன்றளவுமி யானு முளனாகிநின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்றுதோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லாஉணர்வின் மிசையோ டுலகா யதனைப்புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்கொடிதெனவே சென்று குடிபழுதே செய்துகடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்வாடி யிடையு மனந்தனக்கு - நாடியதுபோன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும்உயிரின் றுயர முரையேன் - வயிரமே
தளையினியல்பு
கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தையேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையேயாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்உன்னை யொழிய வுறவில்லை யென்னுமதுதன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்தமெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பெளவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறும்சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலைநிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமேபொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
இறைவனது நிலை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலாவேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போதஅறிவிலறிவை யறியு மவர்கள்குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்வெளியில் வெளியில் வெளியன் வெளியிலொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில்அளவி லளவி லளவன் - அளவிறந்துநின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்கல்லாது தோன்றா வமல னகிலமெலாநில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
தசாங்கம்
1.மலை
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே
2.ஆறு
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்துவையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்களவுபயங் காமங் கொலைகோபங் காதிஅளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்றஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவுநீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழமோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப் புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்மீதான பத்து மிகப்பரந்து - காதிப்
பிறுதிவியப் புத்தேயு வாயுவா காயவுறுதி நிலமைந்து மோடி - மறுவிலாநான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்ததான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லாவூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா
வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கேதஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்
3. நாடு
பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்துநண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்
4. ஊர்
கலையா லுணர்ந்து கருத்தழிந்து காமநிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவேதேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்
5. தார்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந் துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும் புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத
6. குதிரை
வானம் புவன மலைகடலேழ் பாதாள முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமாயெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள்நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்
7. யானை
பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு மாதார மாகி யகண்டநிறைந் - தோதஅரிதா யெளிதா யருமறையா றங்கத்துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாயவெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா லானவே கங்கொண் டருண்மும் மதத்தினாலூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப் பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான் மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்
8. கொடி
சமையங் கடந்து தனக்கொப் பிலாத சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
9. முரசு
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்திஇம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவேஎன்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளேநின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்
10. ஆணை
மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை யுலகு முலகா லுணரவொண்ணா வூருமிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த
இறைவன் பெருமை
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான் பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்தவெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்
ஞானாசாரியார்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்தசம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோநேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையாநெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்
குரூபதேசம்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேனேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய
தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான்கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தைநெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்புவைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரினொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாதவுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லாமிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்களெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்
பாடலா ராடலார் பண்பலார் நண்பலா ராடலா ராட லகன்பதியாங் - கூடலார்காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டாநிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்தமெய்ய னமல னிமலனருள் வீடளிக்குமையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்
அடையும் இடம்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுறநின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவேறொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென் றிகலா விருளலகை போலிகலே பேசு முலகா யதன்பா லுறாதே - பலகாலுந்
தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவேநான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்மிறையே விரும்பி விழாதே - நிறைமேவிவாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும் வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியாவேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாதமூடருடன் கூடி முயங்காதே - நீட வழித்துப் பிறப்ப தறியா தரனைப்பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்
வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோசித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்பொருத நகைமடவார் புன்கலவி யின்ப மருவி மயங்கி வருவரோ - விருபொழுது
நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளையெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கேதரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தாடாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும் பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே யீங்கொன்றை வாரா யினி.
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்தசம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகலநெஞ்சமே வாராய் நினைத்து.

நெஞ்சு விடு தூது முற்றும்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.