LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னையில் அமலானது தமிழக அரசின் ஆட்டோ கட்டணம் ! பயணிகள் மகிழ்ச்சி !

கடந்த மாதம் உச்ச நீதி மன்றம்,  நான்கு வாரத்திற்குள், ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து, தமிழக அரசு, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்டோ கட்டணங்களை முறைபடுத்தி முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இதன் படி, 

 

முதல், 1.8 கி.மீ., தூரத்திற்கான கட்டணம் 25 ரூபாய்; 

 

ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய்.

 

இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரை கூடுதலாக, 50 சதவீதம் கட்டணம்.

 

காத்திருப்பு கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3.50 ரூபாய் வீதம், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய்.

 

திருத்தப்பட்ட கட்டண விகித அட்டையை வரும்செப்டம்பர் 15ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில், ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 

மாற்றப்பட்ட கட்டணத்தை, ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய, அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

பயணிகளுக்கு ஆபத்து நேரும் பட்சத்தில், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்ட அபாய பட்டனை பயணிகள் அழுத்த வசதி செய்யப்படும். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்து, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஆட்டோக்களின் இயக்கத்தை போக்குவரத்து காவல் துறை  தீவிரமாக கண்காணிக்கும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். 

 

ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஆட்டோக்களிலும் பிரதானமாக எழுதப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும்  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப் போவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

by Swathi   on 25 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.