சமீப நாட்களாக இந்திய எல்லை பகுதிக்குள், சீன ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே, புதிதாக எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற, இந்திய - சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த புதிய ஒப்பந்தம், ஜனவரி மாதமே, சீன தரப்பிலிருந்து முன்மொழியப்பட்டு, அது தொடர்பாக, ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், அக்டோபர் மாதம், சீன தலைநகர் பீஜிங்கிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
|