LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு!

செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் மேம்பட்ட வேற்றுகிரவாசிகள் சமூகத்திற்கு இல்லமாக இருந்திருக்கலாம் என பல்வேறு வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் நாசா உட்பட எந்த விண்வெளி அமைப்பும் இந்த சிவப்பு கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்ததற்கான நம்பகமான தடயங்களை கண்டுபிடிப்பதில் வெற்றிபெறவில்லை. 

தற்போது ஹங்கேரிய ஆய்வாளர்களின் ஒரு குழு, அண்டார்டிகாவின் ஆலன் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் ஏ.எல்.எச்-77005 என பெயரிடப்பட்ட ஒரு செவ்வாய் விண்கல்லில், செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகத்தின் இருந்ததற்கான தடயங்கள் இருக்கும் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஓபன் ஆஸ்ட்ரானமி ஜேர்னலில் வெளியான இவர்களது ஆய்வு அறிக்கையானது, செவ்வாய் விண்கலத்தில் உள்ள பொருள், பூமியில் இரும்பு-ஆக்ஸிஜனேற்ற நுண்ணுயிர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருளுடன் மிகவும் ஒத்துப்போகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளது.

"கிரகங்கள், பூமி, உயிரியல், இரசாயனம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என பலவற்றை ஒருங்கிணைப்பதாலும் மற்றும் பல துறைகளின் ஆராய்ச்சியாளர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாலும் எங்கள் ஆய்வு பரந்த பார்வையாளர்களுக்கு முக்கியமாக உள்ளது.

கிரக ஆராய்ச்சியாளர்கள், விண்கல் மற்றும் ஆஸ்ட்ரோபயாலஜி வல்லுநர்கள் மற்றும் மனிதகுல தோற்ற ஆராய்ச்சியாளர்கள் முதல் கற்களின் மயிரடுக்களில் உள்ள நுண்ணுயிரியல் ஊடகத்தின் அம்சத்தை விளக்குவதால் பொது மக்கள் வரை, எங்கள் ஆராய்ச்சியில் ஆர்வமாக உள்ளனர்" என்கிறார் வானியல் மற்றும் பூமி அறிவியல் எச்ஏஎஸ் ஆராய்ச்சி மைய அறிவியலாளரும், இந்த ஆராய்ச்சியின் முன்னணி ஆய்வாளருமான இல்டிகோ கொயோலை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய மனிதர்களின் புரிதலில் புரட்சியை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்த ஏ.எல்.எச்- 77005 செவ்வாய் விண்கல் 1977 ஆம் ஆண்டில் ஜப்பானிய தேசிய துருவ ஆராய்ச்சி மைய திட்டத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கற்கள் குறைந்தது 175 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று, இவை எரிமலை பாறைகளின் சேர்மானம் எனவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஜேர்னல் ஆப் ஆஸ்ட்ரா பயாலஜி அன் ஸ்பேஸ் சயின்ஸ்-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், வேற்றுகிரகவாசிகள் அதன் துவக்கநிலையில் செவ்வாய் கிரகத்தில் வளர்ந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது.நாசாவின் க்யூரியாசிடி ரோவர் மூலம் எடுக்கப்பட்ட பாசி, பூஞ்சை மற்றும் காளான்கள் போன்ற உயிரிகளின் 15 புகைப்படங்கள் அந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டது.

by   on 15 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.