அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாக கருதப்படும், சர்க்கியூட் நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியர் சீனிவாசன், நேற்று பதவி ஏற்றார். அமெரிக்கவின் அதிபராக ஒபாமா பதவி ஏற்றதிலிருந்து, அந்நாட்டின் முக்கிய பதவிகளில், இந்தியர்கள் பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல் முறை. இவரது நியமனத்தை, கடந்த ஜூன் மாதம், அமெரிக்க பார்லிமென்ட் நாடாளமன்றம் அங்கீகரித்தது. இதையடுத்து, சீனிவாசன், நேற்று பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி, குர்ஷரன் கவுர் கலந்து கொண்டார். சீனிவாசனின் தாய், சரோஜா சீனிவாசன் கொண்டு வந்த, பகவத் கீதை புத்தகத்தின் மீது, ஸ்ரீகாந்த் சீனிவாசன் உறுதி மொழி ஏற்றார்.அரியானாவில் பிறந்த சீனிவாசன், அமெரிக்க முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாக, இதற்கு முன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|