நைஜீரியாவில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர். மத்திய நைஜீரியவில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், கிராமங்களில் பலர் தங்கள் வீடுகளின் கூரையில் அமர்ந்து நிவாரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 140 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.
|