LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்

சாலையிரு   புறங்களிலும்   கிளைப  ரப்பிச்

            சாய்ந்துநிழல்   தந்திட்ட   மரங்க   ளூடே

 

ஆலைசங்கின்   ஒலியின்றிக்   குளிர்ந்த   காற்றின்

 

            அன்பான  வருடலிலே  உடல்சி   லிர்க்கக்

 

காலையிளம்   கதிரவனைக்   கண்ணால்   கண்டு

 

            காதுகளில்   பறவைகளின்   குரல்கள்  கேட்டு

 

நூலைத்தோள்   பையினிலே   தொங்க  விட்டு

 

            நுழைந்தபள்ளி   நாள்களிங்கே   வருமோ  மீண்டும் !

 

 

 

அரைக்காலின்   சட்டையுடன்   கைகள்   கோர்த்தே

 

            அடுத்தவீட்டு   சாந்தியுடன்   பள்ளி  முன்பு

 

நரைகிழவி   விற்றிட்ட   கம்மர்   கட்டை

 

            நறுங்கடியாய்ப்  பகிர்ந்துண்ட   இனிய  காட்சி

 

கரையினிலே   வளர்ந்திருந்த   மரத்தி   லேறிக்

 

            கண்ணிமைக்கும்   நேரத்தில்   கரணம்   போட்டே

 

விரைந்தோடும்   தூய்மையான   ஆற்றி   நீரில்

 

            விளையாடி   மகிழ்ந்தநாள்கள்   வருமோ  மீண்டும் !

 

 

 

பொன்வண்டைத்   தீப்பெட்டி   தனில   டைத்தும்

 

            பொறுமையுடன்   தலையாட்டும்   ஓணான்  பார்த்தும்

 

தின்றுபோட்ட  நுங்குகாயில்   வண்டி  செய்து

 

            திரிந்திட்ட   வயல்வரப்பு   தோப்பு  தோட்டம்

 

அன்பாக   அரவணைத்த   அக்கம்   பக்கம்

 

            ஆடுகோழி   மேய்ந்திட்ட   குடிசை   யெல்லாம்

 

இன்றிங்கே    மனிதம்தாம்   மறைந்த   போல

 

            இல்லாமல்   போனதுவே !   வருமோ   மீண்டும் !

 

 

 

 

 

 

Nizhladum ninaivu
by Karumalaithamizhazhan   on 16 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.