LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொலை !!

நீலகிரி மாவட்டம் குந்தசப்பை பகுதியில் சில தினங்களுக்கு முன் 3 பேரை கொன்று அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த புலி நேற்று வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா சுற்றுப்புற பகுதிகளில் சோலாடா, அட்டபெட்டு, குந்தசப்பை ஆகிய பகுதிகளில் 3 பேரை புலி அடித்து கொன்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 3 பேரை கொன்ற புலியை கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் தேடி வந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள்; பரண்கள்; கூண்டுகள் உட்பட வியூகங்களை வைத்து புலியை தேடி வந்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியும் நடைபெற்றது. இந்நிலையில் கப்பச்சி கிராமத்தில் பசு மாட்டையும் புலி அடித்து கொன்றது. இதனால் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். முதல் முறையாக துப்பாக்கியால் சுட்டதில் தப்பிய புலி, 2வது முறை சுட்டதில் உயிரிழந்துள்ளது. இதன் மூலம் கடந்த 18 நாட்களாக ஊட்டியில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

by Swathi   on 22 Jan 2014  0 Comments
Tags: புலி   நீலகிரி புலி   ஊட்டி புலி   புலி தாக்குதல்   புலி சுட்டுக்கொலை   Nilagiri Tiger   Tiger  
 தொடர்புடையவை-Related Articles
தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம் தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம்
நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொலை !! நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொலை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.