சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் நிமிர்ந்து நில் படம் பெர்லின் சர்வதேச பட விழாவில் பங்கேற்கிறது.
ஜெயம் ரவி தற்போது, நிமிர்ந்து நில், பூலோகம், மற்றும் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். நிமிர்ந்து நில் படம் விரைவில் வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் பிப்ரவரி 14- ம் தேதி தொடங்கும் பெர்லின் சர்வதேச பட விழாவில் கலந்து கொள்கிறது. நேற்று ஜெயம்ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு எனக்கு இனிமையாக அமையப் போகிறது. "நிமிர்ந்து நில்' என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம். அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப, படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆண்டு மேலும் பல நல்ல சேதிகள் வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
|