LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இன்று ரிலீசாக வேண்டிய நிமிர்ந்து நில் ரிலீசாவாததற்கு என்ன காரணம் ?

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் நிமிர்ந்து நில். 


படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நிதி சிக்கலில் தவித்து வந்த நிமிர்ந்து நில் படம் ஒருவழியாக இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில கடன் சிக்கல்களால் இப்படம் இன்று ரிலீஸாகவில்லை.


இதுப்பற்றி கோடம்பாக்கத்தில் விசாரித்ததில், நிமிர்ந்து நில் படத்தை தயாரித்துள்ள வாசனன் விஸ்வல் வென்சர்ஸ் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் ஏற்கனவே தான் தயாரித்த சில படங்களுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்திருக்கிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தயாரிப்பாளர்களிடம் சென்று எங்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். 


ஆனால் சீனிவாசனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, இயக்குநர் சமுத்திரகனி ஆகியோரிடமும் முறையிட்டுள்ளது. ஜெயம் ரவியோ, ஏற்கனவே நான் இந்தப்படத்திற்காக ரூ.90 லட்சம் விட்டுக்கொடுத்துள்ளேன் என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதேப்போல் சமுத்திரகனியும், நானும் சுமார் ரூ.50 லட்சம் விட்டுக் கொடுத்துள்ளேன் என்று கைவிரித்துவிட்டார். 


தயாரிப்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்ததால் இன்று வெளியாக இருந்த நிமிர்ந்து நில் படம் ரிலீஸாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால், படம் நாளை ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.

by Swathi   on 07 Mar 2014  0 Comments
Tags: நிமிர்ந்து நில்   Nimirnthu Nil                 
 தொடர்புடையவை-Related Articles
இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !! இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !!
நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !! நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !!
இன்று ரிலீசாக வேண்டிய நிமிர்ந்து நில் ரிலீசாவாததற்கு என்ன காரணம் ? இன்று ரிலீசாக வேண்டிய நிமிர்ந்து நில் ரிலீசாவாததற்கு என்ன காரணம் ?
பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !! பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.