LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை - சென்னையில் தருண் விஜய் பேச்சு !!

அன்னைத் தமிழை வணங்குகின்றேன். திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை. தமிழுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - சென்னையில் தருண் விஜய் பேச்சு !!


சென்னை வந்திருந்த உத்தரகாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழுக்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காரணத்தால் அவருக்கு வைரமுத்து அவர்களின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் சிறப்பான நன்றி கூறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


திரு ஒளவை நடராசன், முனைவர் அறவாணன் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் தருண் விஜய் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றை கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதாகும்.


கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ் மொழி வடநாட்டில் கற்றுத் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை உடனே ஏற்ற தருண் விஜய் உத்தரகாண்டத்தில் அவரது தொகுதியில் தமிழ் மையம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கூறினார். மேலும் அவரது மாநிலத்தில் திருக்குறளை வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். 


தமிழ் மொழி நிச்சயம் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நாம் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் தருண். அதற்காக தான் எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்வதாக கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை. திருக்குறளே இந்தியாவின் தேசிய நூல் என்றும் அறிவித்தார்.

Tarun Vijay and Vairamuthu Discussion
by Swathi   on 12 Nov 2014  0 Comments
Tags: தருண் விஜய்   திருக்குறள்   தமிழ் மொழி   வைரமுத்து   வெற்றித் தமிழர் பேரவை        
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.